விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 1ம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத ஓர் விஷயத்தை இந்த சீசனில் பிக்பாஸ் குழு செய்தது. அதாவது வைல்ட் கார்டு மூலம் 5 போட்டியாளர்களை வீட்டிற்குள் இறக்கியது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரமும் இதற்கு முன் வெளியேறிய போட்டியாளர்கள் இரண்டு பேரை உள்ளே இறக்கியது. இப்படி டிவிஸ்ட்க்கு மேல் டிவிஸ்ட் வைக்கும் பிக்பாஸ் ஷோவின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் பூர்ணிமா மற்றும் விஷ்ணுவும் பேசி கொள்கிறார்கள். அதாவது ஒரு ஹிட் அடிக்க வேண்டும் என்றால் ஹீரோவை விட வில்லனுக்கு வெயிட் அதிகமா இருக்கனும். எனவே அதே போல தான் நான் ஹீரோ கிடையாது வில்லன். அதனால் கண்டிப்பாக கடைசி வரை இந்த ஷோவில் இருப்பேன் என்று விஷ்ணு பூர்ணிமாவிடம் கூறுகிறார். அதன் பிறகு பேசிய பூர்ணிமா, தற்போது விஷ்ணு என்னிடம் பேசியதை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் என்னை அவர் கண்ட்ரோல் பண்ண நினைக்கிறார் என்று கூறுவார்கள் என்று பூர்ணிமா கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
View this post on Instagram