விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடுபிடிக்கவே ஆரம்பித்துள்ளது என்றே சொல்லலாம். 70வது நாளை கடந்துள்ள இந்த சீசனில் போட்டிகளும் கடுமையாகியுள்ளது.
பிக் பாஸ் :
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. நிஷா வீட்டை விட்டு வெளியேறியதால் அன்பு கேங் சற்று ஆட்டம் கண்டுதான் உள்ளது. ரியோவும் அர்ச்சனாவை எதிர்த்து பேசி தான் வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து அர்ச்சனாவின் குரல் மட்டும் தான் ஓங்கி வருகிறது.
ஆரம்பத்திலேயே அர்ச்சனாவை கமல் அடக்கி வைக்கத்தான் செய்தார். ஆனாலும் அர்ச்சனா அன்பு, பாசம் என்று சுற்றி திரிகிறார். அது வெறும் நடிப்பு என்றும் அப்பட்டமாக தெரிகிறது. ஆனாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து அவரது மதிப்பை கெடுத்துக் கொண்டார் என்றே சொல்லலாம். மேலும் கோழி முட்டை டாஸ்க்கிலும் சோம் மற்றும் அர்ச்சனா இடையே சண்டைகளும் ஏற்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அனிதா ஒருதடவை அவர் பேசியது சரியாக இருந்து விட்டதால் தொடர்ந்து கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் மக்களை எரிச்சலாக்கி வருகிறார். அனிதாவை பிடித்து யாரும் ஓட்டு போடவில்லை. அர்ச்சனாவை பிடிக்காமலேயே அவருக்கு ஓட்டு போட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த வாரத்தில் பெஸ்ட்டாக விளையாடியவர்களை தலைவர் போட்டிக்கு விளையாட சொல்கின்றனர். பாலா, அர்ச்சனா மற்றும் ரம்யா இதில் கலந்து கொள்கின்றனர். டாஸ்க்கும் மிகவும் கடினமானதாகவே உள்ளது. இந்நிலையில் அர்ச்சனா முதலில் செய்து முடிக்கிறார். எனவே இந்த வாரத்தின் தலைவர் அர்ச்சனா தான். ஆனால் அவர் தான் இந்த வாரத்தில் வெளியேற போகிறாரே.
அதிரடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – பொதுமக்கள் கவலை!!
விஜய் டிவி மீண்டும் சதி செய்து அர்ச்சனாவை காப்பாற்றினால் அடுத்த வாரமும் அர்ச்சனாவை வெளியேற்ற முடியாது. நேரடியாக இறுதி சுற்றுக்கு போக கூட வாய்ப்புள்ளது. மேலும் இரண்டாவது ப்ரோமோவில் ரம்யாவிடம் பிக் பாஸ் இந்த வீட்டை பற்றி கேட்க பல பொய் கண்ணீரை பார்த்துள்ளேன் என்றும் கூறுகிறார். ஒரு வேளை அர்ச்சனாவை தான் சொல்கிறாரோ என பலரும் சந்தேகித்து வருகின்றனர். இன்றைக்கு முழு எபிசோடை பார்த்தால் மட்டும் தான் தெரியும் என்ன நடக்கிறது என்று.