தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுவது என்னவோ வனிதாவை பற்றி தான். அவரை பற்றிய சிறிய விஷயம் என்றாலே அது காட்டுத்தீ போல பரவி விடுகிறது. இந்நிலையில் நான் மறுபடியும் காதலிக்கிறேன் என்று வனிதா போட்ட போஸ்டால் பலரும் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
வனிதா விஜயகுமார்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். பல வருடங்களாகவே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனது மகன் ஸ்ரீஹரிக்காக போராட ஆரம்பித்து தற்போது வரை தனி ஆளாக தான் போராடி வருகிறார். எடுத்த எடுப்பிலேயே சண்டை என ஆரம்பிப்பதால் தான் வனிதாவிடம் யாரும் நெருங்கவே பயப்படுகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இதற்கு பலரும் அவர்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ஆனாலும் வனிதா அதனை கேட்பதாக இல்லை. பலரையும் இழிவாக பேசி வீடியோ வெளியிட்டார்.
அதன்பிறகு 40வது பிறந்த நாளை கொண்டாட கோவா சென்ற வனிதாவுக்கு பீட்டர் பால் பற்றிய உண்மை தெரியவந்தது. இதனால் இருவருக்கும் பிரேக்கப் ஏற்பட்டது. இதுவும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது. ஆனால் இதுவரையிலும் பீட்டர் பால் எங்கு இருக்கிறார்?? என்ன செய்கிறார்? என்ற எந்த தகவலும் வரவில்லை.
‘இந்த வார தலைவராகும் அர்ச்சனா’
வனிதா இயல்பு வாழ்க்கைக்கு எப்பொழுதோ திரும்பி விட்டார். தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் மக்கள் மத்தியில் எவ்வளவு பேச்சுக்கள் இவரை பற்றி எழுந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் தன் வேலை உண்டு என்றிருக்கிறார். இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்ட இன்ஸ்டா போஸ்டால் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
‘In Love Again’ என்று குறிப்பிட்ட பதிவு பலரையும் கடுப்பாக்கியுள்ளது. மேலும் அதனை ட்விட்டரில் பதிவிட்டு உமாரியாஸ் யூடுப் சேனலை சபஸ்கிரைப் செய்ய சொல்லி பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் ‘பெட்சீட் மாத்துற மாறி புருஷனை மாத்துறா.. அந்த இரண்டு குழந்தையும் பாவம்’ என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.