“பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தினை பிடித்துள்ள நடிகை ஓவியா தற்போது தனது ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஓவியா
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் “மெரினா” திரைப்படத்தில் அறிமுகமானவர் தான், நடிகை ஓவியா. மாடலிங் துறையில் இருந்து சினிமா மீது இருந்த ஆசையின் காரணமாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தான், நடிகை ஓவியா. இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்ததற்கு பின்பாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆச்சு அசலாக விஜய்யை பிரதிபலித்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” பிரபலம் – வைரலாகும் வீடியோ!!
இவர் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் மக்கள் மத்தியில் பெரும் பெயரினை எடுத்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பின்பாக தான். இந்த நிகழ்ச்சியில் இவர் மிகவும் எதார்த்தமாக நடந்து கொண்டார். அந்த குணமே மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். இப்படியாக இருக்க, ஓவியா தனது சக போட்டியாளரான ஆரவ்வை விரும்பினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இருவரும் ஒன்றாக அனைத்து இடங்களுக்கு சென்று வந்தனர். ஆனால், சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து விட்டனர். ஆரவ் சில நாட்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஓவியா தனது ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓவியா எப்போது தனது காதல் குறித்து ரசிகர்களுக்கு தெரிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.