தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு?? முதல்வருடன் தலைமை செயலாளர் ஆலோசனை!!

0

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தற்போது இதனை கட்டுப்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

முதல்வருடன் ஆலோசனை:

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மிக அதிகமாக இருந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக இன்று மாநில முதல்வர்களுடன் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம் சார்பாக தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படுமா என்று அனைவரும் அச்சமடைந்த வருகின்றனர்.

கொரோனா தடுப்பு மருந்து விலை உயர்வு எதிரொலி – புதிய மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல்!!

இந்நிலையில் பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை செயலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர், தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளனர். இதில் பிரதமர் ஆலோசித்ததை குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கவுள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்று அச்சம் இருக்கும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here