Tuesday, April 30, 2024

பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம் – இயக்குனர் சேரன் உட்பட பலரும் இரங்கல்!!

Must Read

பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென்று மரணம் அடைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் போட்டியாளர்:

கடந்த வருடம் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பானது. அதில் பலரும் பங்கேற்ற நிலையில், இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியாவும் பங்கேற்றார். அவரது எதார்த்தமான போக்கு, அனைவரிடமும் பேசிய விதம் என்று அவரது பல நல்ல குணநலன்கள் மக்களை கவர்ந்தது. இதன் காரணமாக அவருக்கு பல ரசிகர்களும் உருவாகினர். பிக் பாஸ் போட்டியில் மிகவும் கடுமையான போட்டியாளராகவும் கருதப்பட்டார். இப்படியாக இருக்க சில நாட்களுக்கு பின் அவருக்கு அந்த வீட்டில் இருந்த சகபோட்டியாளரான கவின் மீது காதல் வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அந்த வீட்டில் போட்டியாளராக இருந்த இயக்குனர் சேரன் கூட தடுத்தார். பல அறிவுரைகளை கூறியும் லாஸ்லியா மற்றும் கவின் காதலித்து வந்தனர். இது ஒரு பக்கம் இருக்கும் போது, பிக் பாஸ் மூலமாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் அவர்களை சந்திக்க வந்தனர். அப்போது லாஸ்லியாவின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வந்தனர்.

லாஸ்லியா அவரது தந்தையை விட்டு 10 வருடங்கள் பிரிந்து இருந்தார். அவரது தந்தையின் வருகையினை லாஸ்லியா உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை. அவரது தந்தை வந்ததும் மிகுந்த கோபத்துடன் லாஸ்லியாவினை திட்டினார்.

இயக்குனர் சேரன் இரங்கல்:

பின், ஒரு மனதாக சமாதானம் ஆன மரியநேசன் லாஸ்லியாவிடம் பாசமாக பேசினார். இதன் காரணமாக லாஸ்லியா மற்றும் அவரது தந்தைக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு நன்றாகவே அனைவருக்கும் தெரியவந்தது. தற்போது லாஸ்லியா சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென்று மரணம் அடைந்துள்ளார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது தந்தையின் மறைவு ஒரு வதந்தியாக இருக்க கூடாதா? என்று அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்த நடிகர் மற்றும் இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித் தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். லாஸ்லியாவிற்கு இது ஈடுசெய்ய முடியாத இழப்பு தான்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -