விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலான பாரதி கண்ணம்மா தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இத்தனை நாட்களாக மக்கள் எதிர்பார்த்திருந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ளது. ஆமாங்க!! துர்காவிற்கு அனைத்து உண்மைகளும் இன்றைய எபிசோடில் தெரிய போகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் தற்போது பாரதிக்கும், கண்ணம்மாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளால் தற்போது அந்த சீரியல் டாப் ரேட்டிங்கில் உள்ளது. நேற்றைய எபிசோடில் கண்ணம்மாவை தேடி சௌந்தர்யா மருத்துவமனைக்கு வந்தும் அவரை பார்க்க முடியாமல் போகிறது.
வீட்டிற்கு சென்றால் அஞ்சலியால் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் பாரதிக்கு எப்பொழுது உண்மை தெரிய வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தினமும் ஒரு ட்விஸ்ட் வைத்து ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஆனால் இன்றைய எபிசோடில் என்றும் இல்லாத விதமாக பல ட்விஸ்ட்களை வைத்துள்ளார் இயக்குனர். பாரதி வீட்டிற்கு வந்து கண்ணம்மாவை தேடி கண்டுபிடித்து விட்டீர்களா?? என்று பாசமாக கேட்கிறார். இதனால் குடும்பத்தினர் சந்தோஷமடைகின்றனர். ஆனால் பாரதி விவாகரத்து பெற கண்ணம்மாவை தேடுகிறேன் என்று கூறியதும் அனைவரும் ஷாக் ஆகின்றனர்.
சௌந்தர்யா கோபமடைந்து உனக்கு எதிராக நான் வாதாடுவேன், உன்னை மறுபடியும் டெஸ்ட் எடுக்க வைப்பேன் என்று கூறுகிறார். இதனால் பாரதியும் கோபமடைந்து செல்கிறார். அடுத்ததாக வெண்பாவின் வீட்டில் அவரது சித்தப்பா கட்டையை வைத்து வெண்பாவை அடிக்கிறார். வெண்பாவை கண்டபடி பேசிவிட்டு பாரதியிடம் உண்மையை சொல்ல போகிறேன் என்று மிரட்டி கொண்டிருக்கும்போது பின்னால் இருந்து வெண்பாவின் அடியாளான பாபு அவரை அடித்து மயக்கமடைய செய்கிறார்.
திரும்பவும் அவருக்கு அந்த ஊசியை போட்டு விட்டு பாரதியுடன் வெளியே செல்கிறார். இதனை பார்த்த துர்கா வெண்பாவின் வீட்டிற்குள் நுழைகிறார். அங்கு வெண்பாவின் சித்தப்பாவை பார்த்து நடந்த விஷயங்களை கேட்கிறார். ஆனால் அவர் அந்த போதை மருந்தால் சிரித்து கொண்டிருப்பதை புரியாமல் கேள்வி கேட்கிறார் துர்கா. வெண்பாவின் சித்தப்பா டைரியை அவரிடம் கொடுக்கிறார்.
அதில் வெண்பா பற்றிய அனைத்து உண்மைகளும் எழுதியிருப்பதை படித்து விட்டு ஷாக் ஆகிறார் துர்கா. இதற்கடுத்து அவர் சௌந்தர்யாவிடம் வெண்பா பற்றிய உண்மையை எப்படி கூறுவார்? என்பதே இன்றைய எபிசோட். எப்படியும் வெண்பாவின் முகத்திரை வெட்டவெளிச்சம் ஆகப்போகிறது. வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பாப்போம்.