சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு அவர்களுடன் செல்ல அவரது மனைவி சௌந்தர்யாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக பெண்ணின் தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில் இந்த உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.
சாதி மறுப்பு திருமணம்:
தலித் சமூகத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சில நாட்களுக்கு முன்னர் பிராமண சமூகத்தைச் சேர்ந்த சௌந்தர்யா எனும் பெண்ணை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். 39 வயதான அவர் 19 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் எம்எல்ஏ வீட்டின் முன்பு பெண்ணின் தந்தை சுவாமிநாதன் தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 39 வயதான பிரபு 19 வயதான தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக அவர் புகார் அளித்தார்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
சத்துணவு பணியாளர்கள் ஆட்சேர்ப்பு ரத்து – முறைகேடு புகாரால் தமிழக அரசு அதிரடி!!
மேலும் உயர்நீதிமன்றத்தில் தனது மகளை ஒப்படைக்கக் கோரி ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். இது தொடர்பாக இன்று சௌந்தர்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி தந்தை சுவாமிநாதன் உடன் சௌந்தர்யாவை பேசிவிட்டு இறுதி முடிவை கூறுமாறு சிறிது நேரம் அவகாசம் அளித்தார். முடிவில் சௌந்தர்யா தனது கணவர் பிரபு உடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். பெண் மேஜர் என்பதால் கணவருடன் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.