வெண்பாவை பற்றிய உண்மையை தெரிந்துகொள்ளும் சௌந்தர்யா?? விறுவிறுப்பான பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!!

0

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸை விட அதிக பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். பாரதிக்கு வெண்பாவின் சுயரூபம் தெரிய வருமா?? கண்ணம்மாவை புரிந்து கொள்வாரா?? என்று மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

நேற்றைய எபிசோடில் பாரதி குடித்து விட்டு மருத்துவமனையில் சண்டை இடுகிறார். இது பல நியூஸ் சேனல்களில் வெளியாகிறது. இதனை பார்த்த பாரதி குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர். அடுத்த கட்டமாக பாரதி குடித்து விட்டு தள்ளாடிக்கொண்டே வீட்டிற்கு வருகிறார்.

bharathi kannama
bharathi kannama

அனைவரும் அதனால் கோபமடைந்து அவரை திட்டுகின்றனர். பாரதி பேசியதை வைத்து ஓரளவிற்கு யூகித்து விடுகிறார் சௌந்தர்யா. இதனால் வெண்பாவிடம் போய் விசாரிக்க வரும் தான் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் வருண் தான்  காரணம் என்று வெண்பா கூற ஆத்திரத்தில் அடிக்கச் செல்கிறார்.

bharathi kannama3
barathi kannama3

அதனுடன் இந்த எபிசோட் முடிவடைந்தது. இன்று பாரதிக்கு வெண்பாவின் சித்தப்பா போன் செய்து உண்மையை கூற முயற்சிக்கிறார். ஆனால் பாரதி எதையும் கேட்கும் மன நிலையில் இல்லை. இதனால் போனை கட் செய்து விடுகிறார் பாரதி.

bharathi kannama2
bharathi kannama2

மேலும் சௌந்தர்யா வருணை நேரில் பார்த்து விசாரிக்க செல்கிறார். அதில் அவருக்கும் வருணுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற உண்மை சௌந்தர்யாவிற்கு புரிகிறது. காருக்கு பெட்ரோல் போட செல்லும் சௌந்தர்யா கண்ணம்மாவை பார்ப்பாரா?? மாட்டாரா?? என்பதே இன்றைய எபிசோட் ஆக உள்ளது.

bharathi kannama2
bharathi kannama2

அதே நேரத்தில் துர்காவும் அந்த இடத்திற்கு வருகிறார். தற்போது 3 பேரும் ஒரே இடத்தில் சந்தித்தால் வெண்பா பற்றிய உண்மை வெட்ட வெளிச்சம் ஆகும். இது நடக்குமா?? வெண்பா பற்றிய உண்மை அனைவர்க்கும் தெரிய வருமா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here