கண்ணம்மாவிடம் உண்மைகளை கூறிய துர்கா – பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!!

0
barathi kannama
barathi kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பல பரபரப்பான கட்டங்களை எட்டியுள்ளது. இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை தேடிக் கொண்டிருக்கும் துர்கா கண்ணம்மாவை பார்த்து விடுகிறார். பின்னர் அவரிடம் வெண்பா பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறுகிறார்.

பாரதி கண்ணம்மா

தற்போது பரபரப்பான பல திருப்பங்களுடன் போய்க்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் வெண்பாவிற்கு எதிராக பல சம்பவங்கள் நடக்கிறது. மேலும் பெட்ரோல் பங்க்கிற்கு வரும் வெண்பா அங்கு வேலை பார்க்கும் பெண்ணிடம் சண்டை போடுகிறார்.

barathi kannama
barathi kannama

இதனை பார்த்த கண்ணம்மா அவரின் கார் பெட்ரோல் டேங்கில் மண்ணை போடுகிறார். இதனால் வண்டி ஓடாமல் பாதியிலேயே நிற்கிறது. மேலும் எப்படியோ வீட்டிற்கு வரும் வெண்பாவை அவர் சித்தப்பா பின்னால் இருந்து அடித்து பாரதியிடம் உண்மையை கூறப்போவதாக மிரட்டுகிறார்.

barathi kannama
barathi kannama

இந்த சமயத்தில் பின்னால் இருந்து வந்த வெண்பாவின் ஆள் சித்தப்பாவை கட்டையால் அடித்து கட்டிப் போட்டு விட்டு வீட்டை விட்டு செல்கின்றனர். வெளியில் இருந்து இவர்கள் செல்வதை பார்த்த துர்கா வீட்டிற்குள் நுழைகிறார். சித்தப்பாவின் டைரியை படித்து அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொள்கிறார். வெளியே வந்து கண்ணம்மாவை தேடி அலைகிறார்.

barathi kannama
barathi kannama

கடைசியாக பெட்ரோல் பங்கில் கண்ணம்மாவை கண்டுபிடித்து விடுகிறார். அவரிடம் நடந்ததை கூற கண்ணம்மா ஆத்திரமடைந்து வெண்பாவை தேடி ஹாஸ்பிடலுக்கு சென்று அவரை பளார்!! பளார்!! என்று அறைகிறார். இன்றைய எபிசோடில் தரமான சம்பவங்கள் ரசிகர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை கண்ணம்மா சௌந்தர்யாவிடம் கூறுவாரா?? இல்லையா?? என்று வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here