பாரதி கண்ணம்மா சீரியலில் சந்தியாவை வெளியேற்றுவதற்காக பார்வதி செய்த சதியை லட்சுமி வீடியோ எடுக்க அதனை பாரதியிடம் கொடுக்கிறார். பார்வதி மட்டுவாரா?? சந்தியா மீது தவறு இல்லை என்று தெரியவருமா?? என்பதை இந்த பதிவில் காணலாம்.
மெகா சங்கமம்
முந்தைய எபிசோடில் சந்தியா சீட்டிங் செய்து தான் இந்த போட்டியில் ஜெயித்தார் என்று அவரை போட்டியை விட்டே வெளியேற்றினர். இதனால் ராஜா ராணி குடும்பம் பெட்டி படுக்கையுடன் ஊருக்கு கிளம்பிக்கொண்டுள்ளனர். மீண்டும் பார்வதி சந்தியாவை திட்ட ஆரம்பிக்கிறார். உங்களால் தான் எல்லாமே என்று சொல்ல கோவமடையும் சரவணன் பார்வதியை திட்டுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சரவண குடும்பம் ஊருக்கு செல்வதை பார்த்து ஓடி வருகிறார் பாரதி. சரவணனை தடுத்து இப்பொழுது நடந்த தவறுக்கும் சந்தியாவிற்கு எந்த சம்மந்தமும் இல்லை. வேறு யாரோ கொஸ்டின் பேப்பர் சந்தியா பேக்ல வச்சு இருக்காங்க என்று உண்மையை போட்டு உடைக்கிறார். அப்போது போட்டி நடத்துபவர்கள் அங்கு வர அந்த வீடியோவை அவர்களிடம் காட்டுகிறார் பாரதி.
அந்த வீடியோவை பார்த்த அனைவரும் நீங்க செய்யாத தப்புக்கு உங்கள போட்டியிலிருந்து விலகிட்டோம், எல்லார் முன்னாடியும் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறோம், நீங்க இந்த போட்டியில தொடர்ந்து கலந்துக்கோங்க என கூறுகிறார்கள்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
பிறகு போட்டியில் கலந்து கொள்ளலாம் என சரவணனும் சந்தியாவும் ஒத்துக்கொள்கிறார். சரவணனின் முழு குடும்பமும் பாரதிக்கு நன்றி சொல்லுகிறது. கடற்கரையில் இருக்கும் பாரதியிடம் வந்து சரவணனும் சந்தியாவும் நன்றி சொல்லுகிறார்கள். நீங்க உங்க நன்றியை லட்சுமியிடம் தான் சொல்லணும், ஆனா எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க என பாரதி கூறுகிறார்.
அப்போது உங்க கணவருக்கு உங்க மேல அவளோ காதல் இருக்கு என சந்தியாவிடம் கூறுகிறார் பாரதி. இரவானதும் கண்ணம்மாவை பார்க்க செல்லுகிறார்கள் சௌந்தர்யா மற்றும் ஹேமா. கண்ணம்மா ரூமுக்கு வரும் ஹேமா கண்ணம்மாவிடம் எனக்கு ஏதாவது கதை சொல்லுங்க என கேட்டு விட்டு, உங்க கதையை சொல்லுங்க என கேட்கிறார்.
என் கதையில் என்ன சுவாரசியம் இருக்கு என கூறிய கண்ணம்மா ஹேமாவுக்கு பிறகு வேறு கதை சொல்லிக்கொண்டிருக்க ஹேமாவுடன் சேர்ந்து சௌந்தர்யாவும் தூங்கி விடுகிறார். இரவு தூக்கத்தில் சிங்கம்..காப்பாத்துங்க என ஹேமா அலற, அவரை பாட்டு பாடி தூங்க வைக்கிறார் கண்ணம்மா.