டிச.,8 ஆம் தேதி “பாரத் பந்த்” – டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு!!

0

டெல்லியில் விவசாயிகளின் “டெல்லி சலோ” போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைத்துள்ளது. இன்று விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் வரும் 8 ஆம் தேதி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் “பாரத் பந்த்” என்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்:

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு 3 வேளாண் சட்ட மசோதாக்களை சட்டங்களாக உருமாற்றி ஒப்புதல் அளித்தது. இதற்கு அனைத்து மாநில விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தது. இதனை அடுத்து அரியானா, பஞ்சாப் உட்பட 6 மாநிலங்களின் விவசாயிகள் கடந்த 7 நாட்களாக “டெல்லி சலோ” என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய என்ற கோரிக்கையினை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. விவசாயிகளின் இந்த போராட்டம் வன்முறையாக மாறிவிட கூடாது என்று போலீசார் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மத்திய அரசு நடத்திய இரண்டு கட்ட பேச்சுவார்தைகளும் தோல்வியினை தழுவியுள்ளன. இதனை அடுத்து நாட்டு மக்கள் அனைவருக்கும் விவசாயிகள் “பாரத் பந்த்” என்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். வரும் டிசம்பர் 8 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தினை நடத்த உள்ளனர். அன்று நாட்டில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளை விவசாயிகள் முடக்க உள்ளனர். அதே போல் அன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் பொம்மைகள் மற்றும் பிரதமர் மோடியின் பொம்மைகள் எரிக்கப்பட உள்ளன.

அடுத்த 2 நாட்கள் தமிழகத்தில் அதி கனமழை வெளுத்து வாங்கும்!!

இது குறித்து விவசாய சங்க பிரதிநிதி லகோவால் கூறுகையில் “வரும் 7 ஆம் தேதி மத்திய அரசு தங்களுக்கு வழங்கிய விருதுகள் மற்றும் பரிசுகளை திருப்பி வழங்க உள்ளோம். மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டம் வலுவடைந்து வருகின்றது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் அமைதியை கடைபிடிப்பது அனைவர் மத்தியிலும் கேள்வியினை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here