அடுத்த 2 நாட்கள் தமிழகத்தில் அதி கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

1

வங்கக்கடலில் உருவான “புரெவி” ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை:

வங்க கடலில் கடந்த 29 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது. இந்த மண்டலத்திற்கு “புரெவி” என்று பெயர் வைத்தனர். இது புயலாக உருவாக கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு இடத்தில் நிலை கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. தற்போது ராமநாதபுரத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பாம்பன் பாலத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 2 நாடகளுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை!!

கடந்த 2 தினங்களாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து பல இடங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல் பல மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. தருமபுரி மாவட்டத்தில் 32 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. அதே போல் மழை காரணமாக 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். கனமழை காரணமாக 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here