கர்ப்பமான விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்வாரா தனம்?? சூடுபிடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருப்பதை அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் ஏதோ யோசனையிலேயே இருக்கிறார். இதனால் மீனா தான் குழந்தை பெற்றுக் கொண்டதற்காக பொறாமை படுவதாக நினைத்து வீட்டை விட்டே செல்கிறார். தனம் கர்ப்பமான விஷயத்தை சொல்வாரா?? மாட்டாரா?? என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை நாட்கள் மீனா குழந்தையை தனியாக பார்த்துக் கொண்டிருந்தார். தனமும் தான் கர்ப்பமாக இருக்கிறோமா?? என்ற பதட்டத்திலேயே வீட்டில் கவனம் செலுத்தாமல் ஏதோ யோசித்துக் கொண்டே என்ன செய்வது என்று தெரியாமல் கோவிலுக்கு சென்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த நேரம் பார்த்து என்னன்னவோ நடந்து போக வீட்டிற்கு வரும் தனத்திடம் முல்லை அனைத்தையும் கூறுகிறார். அப்பொழுது ஜனார்த்தனன் வந்து ஒரு கலகமே ஏற்படுகிறது. இதனால் மீனாவும் இனிமேல் இந்த வீட்டிற்கே வர மாட்டேன் என்று கூறி அங்கிருந்து செல்கிறார். இப்பொழுது கூட மீனா யாரிடமும் உண்மையை சொல்லவில்லை. உண்மையை சொல்லி இருந்தால் இந்த பிரச்சனைகள் நடந்தே இருக்காது.

மாலையும், கழுத்துமாக மணக்கோலத்தில் பாரதி & வெண்பா!!

மேலும் முல்லையும் உங்களுக்கு என்ன தான் ஆச்சு என்று கேட்க அதற்கும் பதில் இல்லை. ஜீவா நடந்தது நினைத்து அப்படியே நிற்க தனம் அவரிடம் நான் வேணும்னு எதையுமே செய்யல என்ன நம்பு என்று அழுகிறார். ஆனால் எதையும் காதில் வாங்காமல் அங்கிருந்து செல்கிறார் ஜீவா. ரூமிற்கு சென்று அங்கு குழந்தையை விளையாட்டு பொருட்களை பார்த்து அழுகிறார்.

மீனாவிற்கு கால் செய்ய மீனா எடுக்கவே இல்லை. அடுத்ததாக தனம் நடந்ததை நினைத்து வருத்தப்படுகிறார். ஆனாலும் அவர் குழப்ப நிலையில் தான் உள்ளார். மேலும் கண்ணாடியை பார்க்கும் தனம் வயிற்றில் தலையணையை வைத்து அழகு பார்க்கிறார். அப்பொழுது முல்லை அங்கு வர அதனை பார்த்து குழம்புகிறார். இதனால் தனமும் சமாளித்து வளையலை கழற்றுவது போல நடிக்கிறார்.

முல்லை உங்களுக்கு என்ன தான் ஆச்சு அக்கா, சொன்னா தான எங்களுக்கும் தெரியும் என்று கேட்கிறார். ஆனாலும் தனம் வாயை திறக்கவில்லை. அடுத்ததாக மீனாவை காட்டுகின்றனர். மீனா சோகமாக இருப்பதை பார்த்த ஜனார்த்தனன் என்ன என்று கேட்க மீனா ஒன்றும் சொல்லவில்லை. மாப்பிள்ளை கால் செய்தாரா?? என்று கேட்கிறார்.

மீனாவும் ஆம், ஆனால் எடுக்கவில்லை என்று சொல்கிறார். இதற்கு ஜனார்த்தனன் அப்படி தான் பண்னனும். கொஞ்சம் கொஞ்சமா மாப்பிளையை நம்ம பக்கம் கொண்டுவந்து இங்கயே தங்கவைக்கணும் என்று கூறுகிறார். ஜீவாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது என்று மீனா சொல்ல அப்படியெல்லாம் நினைக்க கூடாது என்று மீனாவை குழப்பி விடுகிறார்.

மேலும் தனம் தான் கர்ப்பமாக இருந்த போது நன்றாக பார்த்துக்கொண்டதை கூற அதெல்லாம் வெறும் நடிப்பு உன் குழந்தை உன்னோடது மட்டும் தான். அவங்க வெறும் பெரியம்மா பெரியப்பா மட்டும் தான் என்று கூறுகிறார். மீனாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here