எளிமையான மற்றும் இயற்கையான முறையில் நம் சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம். அழகான முகம் யாருக்குத்தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள். நாமும் கலராக வேண்டும் என்று இன்றைக்கு பல கிரீம்களை பயன்படுத்தி, இருக்கின்ற அழகையும் கெடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். உடல் தங்கம் போல் மின்ன வேண்டுமென்றால் தினமும் ஆவாரம் பூ நம் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
உடல் சிவப்பாக மாற:
ஆவாரம் பூவை எடுத்து நிழலில் உலர்த்தி அரைத்து சலிக்க வேண்டும். இதற்கு சமஅளவு கடலைமாவு கலந்து ஒரு டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். இந்த மாவை தினமும் காலையில் அல்லது குளிக்க செல்வதற்கு முன் முகம், கழுத்து, கை மற்றும் உடல் முழுக்க தேய்த்து அரைமணிநேரம் ஊறவைத்து குளித்தால் சில நாட்களிலேயே கருத்த உடல் சிவப்பாக மாறும்.
ஆவாரம் பூ டீ:
ஆவாரம் பூ 10 எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, சுவைக்காக நாட்டுச்சர்க்கரை அல்லது பணங்கற்கண்டு சேர்த்து ஏலக்காய் பொடி தூவி குடித்தால் மிக சுவையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் 48 நாட்கள் தொடர்ந்து குடித்தால் சர்க்கரை நோய் சுத்தமாக போய்விடும். உடல் எடையை குறைப்பவர்களும் டீ, காபிக்கு பதிலாக குடிக்கலாம். முகம் அழகு பெறுவதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. உடல் சூடு தணியும்.
குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை போக்க:
ஆவாரம் பூவுடன், வெள்ளரி விதை, கசகசாவும் சேர்த்து பால் விட்டு விழுதாக அரைத்து முகம், கழுத்து, காய், கால் எல்லாம் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்துவிட்டு, பிறகு பாலை தொட்டு மசாஜ் செய்து கழுவினால் குளிர் காலத்தில் ஏற்படும் வறட்சி தன்மை நீங்கி பளபளப்பாகவும், கலராகவும் இருக்கும். பெரும்பாலும், குளிர் காலத்தில் சோப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாவு மற்றும் எண்ணெய் தேய்த்து குளித்தால் சருமம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.
கண்கள் அழகாக இருக்க வேண்டுமா??
நாம் அன்றாட வாழ்வில் கண்களுக்கு அதிகமான வேலை கொடுக்கிறோம். மொபைல் போன்களை, பயன்படுத்துவது, நாள் முழுவதும் கணினியில் வேலை பார்ப்பவர்கள் கண்கள் பொலிவிழந்து காணப்படும். கண் எரிச்சல் மற்றும் கருவளையம் போன்ற அனைத்து கண் பிரச்சனை இருப்பவர்களும் ஆவாரம் பூ பொடி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்கள் அழகா மாறும். கண்கள் அழகாக இருந்தால் தான் முகம் அழகாக இருக்கும்.