பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல எதிர்ப்பாராத திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. வெண்பா கழுத்தில் பாரதி தாலி காட்டுவாரா?? மாட்டாரா?? என்பதே விறுவிறுப்பாக போய்க்கொண்டுள்ளது. இந்நிலையில் இன்றைக்கும் பாரதியின் கல்யாணம் தடைபடுகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தைய எபிசோடில் வீட்டிற்கு தெரியாமல் வெண்பாவை திருமணம் செய்துகொள்ள செல்லும் பாரதி இடையில் பல தடங்கல்களை சந்திக்கிறார். அதையும் தாண்டி கோவிலுக்கும் செல்கிறார். மேலும் வெண்பா தாலி, மாலை என அனைத்தையும் ரெடியாக வைத்திருக்க அந்த சமயம் பார்த்து கண்ணம்மாவின் அப்பா சண்முகம் அங்கு வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் அவர்கள் ஒளிந்து கொள்கின்றனர். பாரதியின் கெட்ட நேரமோ என்னவோ சௌந்தர்யாவிற்கு தெரிந்தவர் ஒருவர் பார்த்து விடுகிறார். உடனே சௌந்தர்யாவிற்கு கால் செய்து நடந்த அனைத்தையும் சொல்கிறார். அதன் பின் சண்முகம் கோவிலை விட்டு சென்றதும் திருமணம் செய்து கொள்ள பாரதியும் வெண்பாவும் வருகின்றனர். அப்பொழுது கோவில் சன்னிதானம் மூடி விடுகிறது.
இன்றைக்கு திருமணம் நடைபெறாது என்றும் கூறி விடுகிறார் ஐயர். இதனால் ஏமாற்றம் அடைந்து வீடு திரும்புகின்றனர். சௌந்தர்யா அப்பொழுது பாரதிக்கு கால் செய்து நடந்தவற்றை கேட்க, அதற்கு பாரதி அது என் நண்பனின் திருமணம். துணை மாப்பிள்ளைக்காக நின்றேன் என்று கூறி சமாளிக்கிறார். அடுத்ததாக வெண்பாவிடம் இது ஏதோ தப்பாக தெரிகிறது. நாம் அவசரப்படுகிறோம்.
தமிழக அரசு ஊழியர்களின் சம்பள குறைப்பு!!
அனைவரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூற வெண்பாவிற்கு கடுப்பாகிறது. பாரதி வெண்பாவிடம் உனக்கு ஏதும் வருத்தம் இல்லையே என்று கூற வெண்பா கொதித்தெழுகிறார். வெண்பா இத்தனை வருடம் காதலித்த விஷயத்தை கூறுகிறார். பாரதிக்கு ஷாக் ஆகிறது.
கல்லூரி காலத்தில் தான் காதலித்ததையும் ஆனால் நீ ஹேமாவை விரும்பியதால் தான் விலகி விட்டதாகவும் அதன் பிறகு நான் காதலை சொல்ல வரும் வேளையில் கண்ணம்மாவை திருமணம் செய்துகொண்டதையும் கூறி அழுகிறார்.
இது அத்தனையும் பொய் என்றாலும் பாரதி வழக்கம் போல நம்பி ஏமாறுகிறார். மேலும் கண்டிப்பாக நாளை நம் திருமணம் நடக்கும் என்று வாக்கு கொடுக்கிறார். பாரதி வெளியே சென்றதும் தான் நினைத்ததை சாதித்து விட்டதாக எண்ணி சந்தோஷமடைகிறார் வெண்பா. இதோடு எபிசோடு முடிவடைகிறது.