கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் உரிய வருமானம் இன்றி தவிக்கும் நிலையில் தொடர் விலைவாசி உயர்வு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கச்சா எண்ணெய் விலையை உயர்த்த சவூதி அரேபியா அரசு திட்டமிட்டு உள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அடுத்த மாதம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேரல் விகிதம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு சர்வதேச சந்தையில் அதன் விலையை உயர்த்தும் முடிவுக்கு சவூதி வந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு:
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கொரோனா சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மே மாதம் வரை எந்த மாற்றமும் செய்யவில்லை. அதன்பிறகு ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழக அரசு ஊழியர்களின் சம்பள குறைப்பு!!
இன்று சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து 86.51 ரூபாய்க்கும், டீசல் 24 காசுகள் அதிகரித்து 79.21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த சவூதி அரேபியா முடிவு செய்திருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.