விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல பரபரப்பான கட்டங்களுடன் டாப் ரேட்டிங்கில் உள்ளது. ஏற்கனவே வெளியிட்ட ப்ரோமோவில் கண்ணம்மாவிற்கு குழந்தை பிறக்க உள்ளதாக காட்டப்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் வெண்பாவிற்கு துர்கா தாலி கட்டப் போகிறார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா
பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கண்ணம்மா சௌந்தர்யாவின் சில ஏற்பாடுகளை தெரிந்து கொண்டு அங்கிருந்தும் வெளியேறுகிறார். எங்கு செல்வதென்று தெரியாமல் போய்க்கொண்டிருக்கும் கண்ணம்மா ஆசிரமத்தில் வேலைக்கு சேருகிறார். அங்கு ஒரு பெண் ஆசிரமத்தில் தங்கி இருப்பவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த பால், முட்டைகளை விற்று பணமாக்குகிறார்.
இதனை கவனித்த கண்ணம்மா அவரை கண்டிக்க முயற்சிக்கிறார். மேலும் நேற்றைய எபிசோடில் அந்த பெண்ணிற்கு பணம் கொடுத்து கண்ணம்மாவை கொலை செய்ய சொல்கிறார் வெண்பா. இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை சௌந்தர்யா கண்டுபிடித்து விடுகிறார். ஆசிரமத்தில் கஷ்டப்பட்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணம்மாவை பார்த்து சௌந்தர்யா கண் கலங்குகிறார்.
அவருக்கு உதவியும் செய்கிறார். ஆனால் இதெல்லாம் கண்ணம்மாவிற்கு தெரிந்தால் இங்கு இருந்து சென்று விடுவாளோ என்று பயந்து அவளுக்கு தெரியாமல் உதவி செய்ய நினைக்கிறார் சௌந்தர்யா. இதனால் அங்கு சிசிடிவி கேமரா பொருத்துகிறார். அங்கிருந்த படியே கண்ணம்மாவை லேப்டாப் மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறார் சௌந்தர்யா.
இந்நிலையில் கண்ணம்மாவிற்கு தனியாக உதவி செய்தால் அவளுக்கு சந்தேகம் வரும் என்று நினைத்த சௌந்தர்யா ஆசிரமத்தில் இருக்கும் அனைவர்க்கும் உதவ நினைக்கிறார். அதன் பின் காரில் ஜாலியாக பாட்டு பாடிக்கொண்டே செல்லும் வெண்பாவை காரின் பின்னால் வெண்பாவிற்கு தெரியாமல் அமர்ந்திருந்த துர்கா கத்தியை வைத்து மிரட்டுகிறார்.
மேலும் வெண்பாவிற்கு தாலியும் கட்டுகிறார். அடுத்த சிக்னலில் போலீஸ் நிற்கிறது. இதனால் துர்கா அதிர்ச்சியடைகிறார். இதோடு இன்றைய எபிசோடும் முடிவடைகிறது. அப்படி என்றால் வெண்பா தான் துர்காவிற்கு ஜோடியாக இருக்குமோ?? தற்போது கண்ணம்மாவிற்கும் குழந்தை பிறக்கப் போகிறது.
குழந்தை பிறந்தால் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து கண்ணம்மா பாரதியின் குழந்தை தான் என்று நிரூபித்து விடுவார். மேலும் பாரதிக்கு உண்மை தெரிய அதிக வாய்ப்புள்ளது. இதனால் வெண்பாவின் சதி வெளியே தெரிந்து மீண்டும் பாரதியும், கண்ணம்மாவும் ஒன்று சேர்வர்களா?? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.