பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த 8 வருட பிரிவிற்கு பிறகு கண்ணம்மாவின் குழந்தையை முதன்முதலில் பார்க்கிறார் சௌந்தர்யா. மேலும் ஹேமாவும், லட்சுமியும் ஒன்றாக நடமாடுகின்றன. இதனை பார்த்த கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் கண்கலங்குகின்றனர்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பிரபலமாகி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை வருடங்களாக பிரிந்து இருந்த குடும்பம் தற்போது ஒன்றாக சேர்ந்து வருகிறது. இந்நிலையில் சௌந்தர்யாவும் இந்த பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கண்ணம்மாவும் லக்ஷ்மியும் அங்கு வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேடையில் சௌந்தர்ய லட்சுமி என்று பாரதி அழைக்க அது நம் பேத்தி தான் என்று கண்டு பிடிக்கிறார். இத்தனை வருடங்கள் தனது பேத்தியை பார்க்காமல் இருந்த சௌந்தர்யா, வேணு லக்ஷ்மியை பார்த்து கண்கலங்குகின்றனர். அகிலனும் உணர்ச்சிவசப்பட, பாரதி லக்ஷ்மியை பற்றி புகழ்ந்துகொண்டே உள்ளார்.
இந்த மாதிரி ஒரு தைரியம், துணிச்சல் நிறைந்த பெண்ணை நான் பார்த்தது இல்லை என்றும், அம்மா மேல் அதிகப்படியான பாசம் என்றும் கூறுகிறார். இதனால் புல்லரித்து போகிறார் சௌந்தர்யா. வேணு லக்ஷ்மியை பார்த்து உன்னை போலவே இருக்கிறாள் என்று சௌந்தர்யாவிடம் கூறுகிறார்.
தமிழகத்தின் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
பாரதி வேறு லக்ஷ்மியை புகழ்ந்து தள்ள அந்த பக்கம் வெண்பாவால் அதனை கேட்கவும் முடியவில்லை. தூரத்தில் இருந்தும் தனது பேத்தியை அள்ளி அணைக்க முடியாமல் தவிக்கிறார். கண்ணம்மாவை ஸ்டேஜ்க்கு அழைக்க அங்கிருந்து வெளியேறுகிறார். மேலும் குழந்தைகள் டான்ஸ் ஆடும் போட்டி நடைபெறுகிறது.
ஹேமாவுடன் ஆடும் குழந்தை வர முடியாத காரணத்தால் வேறு குழந்தையை அழைக்கின்றனர். லட்சுமி தான் ஆடுவதாக கைதூக்குகிறார். அக்காவும் தங்கச்சியும் ஓரிடத்தில் சந்திப்பதை பார்த்த சௌந்தர்யா கண்கலங்குகிறார். இதனால் கடுப்பாகிறார் வெண்பா.
லட்சுமியும், ஹேமாவும் ரெடி ஆகிவிட்டு வருகின்றனர். இருவரும் ‘தெய்வம் தந்த பூவே’ பாடலுக்கு அழகாக நடனமாடுகின்றனர். அரங்கமே கைதட்டுகிறது. சௌந்தர்யா கண்ணீர் மல்க அந்த காட்சியை காணுகிறார். பாடல் முடிவடைய அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகின்றனர். சௌந்தர்யா மேடைக்கு சென்று லக்ஷ்மியை ஆரத்தழுவி முத்தமிடுகிறார். இதனை தூரத்தில் இருந்து பார்த்த கண்ணம்மாவும் கண்கலங்குகிறார்.