வெண்பாவின் விஷத்தால் சுயநினைவை இழக்கும் கண்ணம்மா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல காட்சிகள் நடந்து வருகிறது. வெண்பா கொடுத்து விட்ட விஷ மருந்தால் கண்ணம்மாவின் நிலை மோசமாகிறது. இன்றைய எபிசோடில் கண்ணம்மா கலந்துகொள்ள இருக்கும் கோலப்போட்டியில் சௌந்தர்யா நடுவராக பங்கேற்க உள்ளார்.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. வெண்பா கொடுத்த விசா மருந்தால் கண்ணம்மாவால் எழுந்திருக்க கூட முடியவில்லை. முன்பு இருந்த இருமல் மயக்கத்தை தாண்டி மேலும் அதிகரித்துள்ளது. ஸ்கூலுக்கு கிளம்பி செல்லும் லட்சுமி மறுபடியும் மாத்திரையை சாப்பிட சொல்லுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக வெண்பாவை காட்ட வீட்டு வேலைக்காரியுடன் பேசிகொண்டுள்ளார். எப்படி கண்ணம்மாவை விரட்டி விட்டு பாரதியை திருமணம் செய்ய போகிறீர்கள் என்று கேட்க வெண்பாவும் தான் கொடுத்த விஷ ஊசியை நினைத்து பார்த்து சிரிக்கிறார்.

அடுத்ததாக சௌந்தர்யாவை காட்ட பாரதியும் ஹேமாவும் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறார். திடீரென ஹேமா சௌந்தர்யாவிடம் நீங்க நல்ல கலரா இருக்கிங்க, அப்பறம் எப்படி நான் மட்டும் கருப்பா இருக்கேன்.

மோடிக்கு கொலை மிரட்டல் – கனடாவின் காலிஸ்தான் அமைப்பின் அறிவிப்பால் பரபரப்பு!!

நான் அம்மா மாதிரியா?? என்று கேட்க பாரதியும் சௌந்தர்யாவும் அதிர்ச்சியடைகின்றனர். சௌந்தர்யா ஆமாம் என்று சொல்லுகிறார். பாரதி கோவப்பட்டு எழுந்திரித்து செல்கிறார். அடுத்ததாக பக்கத்துக்கு தெருவில் இருக்கும் இரண்டு பெண்கள் சௌந்தர்யாவை தேடி வருகின்றனர்.

சௌந்தர்யாவிடம் அனாதை குழந்தையை வளர்கிறீர்கள் என்று கேள்விப்பட்டதாக சொல்ல சௌந்தர்யா அவர்களை திட்டுகிறார். அடுத்து அவர்கள் கோலப்போட்டிக்கு சௌந்தர்யாவை நடுவராக அழைக்கின்றனர். அடுத்தாக கண்ணம்மாவை காட்ட வெண்பா கொடுத்த விஷ மருந்தால் கண்ணம்மாவிற்கு மயக்கம் வருகிறது. எல்லாம் மங்கலாக தெரிய சுயநினைவு இல்லாமல் போகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here