சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப காவல்துறைக்கு அதிகாரம் இல்லை – டிடிவி தினகரன் பேட்டி!!

0

சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப காவல்துறைக்கு அதிகாரம் இல்லை, அதிமுக கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.

டிடிவி தினகரன் பேட்டி

நான்கு வருட சிறைத்தண்டனை முடித்து இன்று சசிகலா சென்னை திரும்பியுள்ளார். கொரோனா சிகிச்சை முடித்து மருத்துவமனையிலிருந்து பெங்களூரு வந்த சசிகலா, அதிமுக கொடியை அவர் காரில் பறக்கவிட்டதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். பெங்களூரிலிருந்து தமிழகம் திரும்பும் சசிகலா வாகனத்தில், அதிமுக கட்சி கொடியை பறக்க விட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், ஓசூர் ஜூஜூவாடி அருகே வந்த சசிகலாவின் காரில் தடையை மீறி பறக்கவிடப்பட்டிருந்த கொடி அகற்றப்பட்டது. தொடர்ந்து சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

#INDvsENG டெஸ்ட் – முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த அஸ்வின்!!

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. காரில் ஏற்பட்ட சிறு கோளாறின் காரணமாக, அவர் வேறு நிர்வாகியின் காரில் பயணித்தார். அமமுக தொண்டர்கள் யாரும் அதிமுக கொடியை பிடிக்க மாட்டார்கள். சின்னம்மாவுக்காக அதிமுக கட்சியினர் தான் கொடி பிடித்தனர். அதிமுகவினரே சசிகலாவுக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். சசிகலா வருகையை பிடிக்காதவர்கள் நீதிமன்ற அவையை அவமதிக்கிறார்கள். அதிமுக கட்சியையும், இரட்டை இலை கொடியையும் கைப்பற்றும் வரை அதற்கான பணி தொடரும். காவல்துறை நடுநிலையாக செயல்பட்டால் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்’ என பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here