லட்சுமியிடம் விஷ மருந்தை சேர்த்து கொடுத்து விடும் வெண்பா – கண்ணம்மாவின் நிலை என்ன??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல எதிர்பாராத சம்பவங்க;ல் நடந்து வருகிறது. தனது அம்மாவின் மருத்துவத்திற்காக பாரதியை பார்க்க வரும் லட்சுமியிடம் வெண்பா விசா மருந்தையும் சேர்த்து அனுப்பி விடுகிறார். அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்பதே சஸ்பென்ஸாக உள்ளது.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் இப்படியும் ஒருவர் மீது அன்பு வைக்க முடியுமா?? என்ற அளவிற்கு இருந்த காதல் ஜோடி தான் பாரதியும் கண்ணம்மாவும். வெண்பாவின் சதித்திட்டதால் பிரியும் பாரதி கண்ணம்மா 8 வருடம் ஆகியும் இதுவரை ஒன்று சேரவும் இல்லை.

கண்ணம்மாவை பற்றிய தவறான எண்ணம் பாரதியின் ஆழ பதிந்து விட்டது. மேலும் ஒரு பக்கம் சௌந்தர்யா கண்ணம்மாவை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் ஹேமா அகிலனை வற்புறுத்தி கண்ணம்மாவின் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அகிலன் கண்ணம்மா வீடு என்றே தெரியாமல் வருகிறார். வீடு வந்து சேர்ந்ததும் அகிலனுக்கு கால் வர ஹேமாவை மட்டும் போக சொல்லுகிறார். ஹேமா வந்ததும் கண்ணம்மா எடுத்து தருகிறார். மேலும் வாசல் வரைக்கும் வந்து விட்டு செல்கிறார். ஆனாலும் அகிலன் கண்ணம்மாவை பார்க்கவே இல்லை.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக அஞ்சலிக்கு அவரது அம்மா கால் செய்து பேசுகிறார். அப்பொழுது பார்த்து எதோ முக்கியமான விஷயமாக சௌந்தர்யா அஞ்சலியின் அம்மா வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது அஞ்சலியிடம் போனில் சௌந்தர்யாவை பற்றி பேசுகிறார். சரியாக சௌந்தர்யாவும் உள்ளே வருகிறார்.

கண்ணம்மாவை பற்றி அஞ்சலியிடம் கேவலமாக பேசுகிறார். அவள் என்னவோ ஒழுக்கமானவள் போல தேவையில்லாம தேடி அலையுறாங்க. அந்த கண்ணம்மா வராத வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த ஹேமாவை தான் ஒழுச்சு கட்டணும். நீயே எல்லாத்தையும் ஒடச்சுட்டு ஹேமா தான் பண்ணானு பழியை தூக்கி போடு என்று சொல்லுகிறார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் – தண்டனைகளை அதிகரிக்க மசோதா!!

இதை எல்லாத்தையும் வாசலில் இருந்து கேட்டு விடுகிறார் சௌந்தர்யா. அதனை பார்த்து விடும் அஞ்சலியின் அம்மா பதறுகிறார். சௌந்தர்யா வந்து நீயெல்லாம் ஒரு பொம்பளையா?? இப்படி கேவலமா நடந்துக்குற என்று காரி துப்புகிறார். அதன் பிறகு லட்சுமி ஆட்டோ டிரைவர் உடன் பாரதியின் மருத்துவமனைக்கு வருகிறார்.

பாரதியை பார்க்க உள்ளே செல்ல அங்கு வெண்பாவும் இருக்கிறார். வெண்பாவிற்கு லட்சுமியை பார்த்ததும் அதிர்ச்சியாகிறது. பாரதி ரிப்போர்ட்டை எடுத்து பார்க்க கண்ணம்மாவின் பெயர் அழிந்துள்ளது. லட்சுமியிடம் உங்க அம்மாவின் பெயர் என்ன என்று கேட்க லட்சுமி சொல்ல வருவதற்குள் போன் வருகிறது.

ஒரு முக்கியமான ஆபரேஷன் இருப்பதாக சொல்லி அங்கிருந்து மருந்து மட்டும் எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து செல்கிறார் பாரதி. அங்கு வெண்பா மட்டும் இருக்க இது தான் சரியான நேரம் என்று யோசித்து லட்சுமியிடம் விஷ மருந்தையும் சேர்த்து அனுப்பி விடலாம். இது தான் கண்ணம்மாவை கொல்ல சரியான நேரம் என்று யோசிக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here