விஜய் டிவியில் தற்போது ராஜா ராணி சீரியலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கண்ணம்மாவும், சௌந்தர்யாவும் போட்டிக்கு கிளம்புகின்றனர். அதோடு ராஜா ராணி சீரியல் குடும்பமும் கிளம்புகின்றனர்.
பாரதி கண்ணம்மா ராஜா ராணி மெகா சங்கமம்
கண்ணம்மாவின் வீட்டிற்கு வந்து சௌந்தர்யா போட்டியில் கலந்துகொள்ள தன்னுடன் வர அழைக்கிறார். கடைசியில் கண்ணம்மாவும் சௌந்தர்யாவுடன் வர ஒப்புக்கொள்கிறார். கடைசி நேரத்தில் கண்ணம்மாவிற்கு போகலாமா?? வேண்டாமா?? என்ற யோசனையும் வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பாரதியின் வீட்டில் சௌந்தர்யா அனைவரும் கண்ணம்மாவிற்காக காத்துக்கொண்டுள்ளனர். இப்படி இருக்க அவர் ஆட்டோவில் வர பாரதி வீட்டின் வாசலில் அமர்ந்திருக்கிறார். பாரதியும் கண்ணம்மாவும் பார்த்து விட்டால் பெரிய பிரச்சனையே ஆகி விடும்.
ஆனாலும் சௌந்தர்யா சமாளித்து அவரை அங்கிருந்து அழைத்து செல்கிறார். அடுத்ததாக ராஜா ராணி குடும்பத்தில் அனைவரும் கிளம்பி தயாராக உள்ளனர். சந்தியா வெளியே வர கால் தடுக்கி கீழே விழுகிறார். இதனை பார்த்து அர்ச்சனா சிரிக்கிறார்.
அடுத்து சிவகாமி உன்னை அந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக அசிங்கப்படுத்துவேன். மருமகளுக்கு நீ தகுதியே இல்லைனு நிரூபிப்பேன் என்று கூறுகிறார். சரவணன் சந்தியாவிற்கு சப்போர்ட்டுக்கு வர சிவகாமி அவரையும் திட்டுகிறார். இங்கு சௌந்தர்யா கண்ணம்மா வரும் சந்தோசத்தில் வருகிறார்.
என்ன தான்டா நடக்குது அங்க?? புதுவையில் தலைமை செயலாளர் பதவி நீக்கம்!!!
பாரதியை பற்றி லட்சுமியிடம் சொல்ல சொல்கிறார். இதனால் கோவமடையும் கண்ணம்மா அப்படி ஒருத்தன் அப்பான்னு என் பொண்ணுக்கு தெரியவே வேண்டாம் என்று கூறுகிறார். திடீரென வண்டி தடுமாறுகிறது. பக்கத்தில் ராஜா ராணி குடும்பமும் வேனில் போயிக்கொண்டுள்ளனர்.
இந்த கார் தடுமாறுவதை பார்த்து கலக்கமடைகின்றனர். எப்படியோ வண்டியை காப்பாற்றுகின்றனர். அகிலன் மற்றும் அஞ்சலி வேறு காரில் வந்து கொண்டுள்ளார். அவர்களுக்கு கால் செய்து நடந்ததை சொல்ல அவர்களும் அந்த இடத்திற்கு வருகின்றனர். இந்த சூழ்நிலையை வெண்பா பயன்படுத்தி கொள்கிறார்.
பாரதி வீட்டில் தனியாக இருக்க அவர் மனதில் இடம் பெற வேண்டும் என்று ஆசைபடுகிறார். மேலும் இப்படி பாரதியை விட்டுவிட்டு தனியாக எப்படி சென்றார்கள். இதில் எதோ இருக்கு என்று நினைத்து கொள்கிறார்.
அடுத்து அனைவரும் நல்லபடியாக ரிசார்ட்டுக்கு வந்து சேருகின்றனர். சரவணன் குடும்பத்திற்கு 2 ரூம் மட்டுமே கிடைத்ததால் ஆண்கள் ஒரு ரூமிலும், பெண்கள் மற்றொரு ரூமிலும் தங்குகின்றனர். இதோடு எபிசோடு முடிவடைகிறது.