என்ன தான்டா நடக்குது அங்க?? புதுவையில் தலைமை செயலாளர் பதவி நீக்கம்!!!

0

புதுவையில் இன்னும் சில தினங்களில் தலைமை செயலாளர் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய தலைமை செயலாளராக யார் பதவி ஏற்கப்போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

புதுவை:

புதுவையில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே புதுவையில் ஆளும் கட்சியின் ஆட்சி கவிழ்ந்து பல பரபரப்பான சூழல் ஏற்பட்டது. முதலில் புதுவை ஆளுநர் மாற்றம் பின்பு புதுவை முதல்வரின் ஆட்சி கவிழ்ப்பு என்று தொடர்ந்து பரபரப்பான நிலையே ஏற்பட்டு வருகிறது. இந்த செயல்களுக்கு பின்பு பாஜக உள்ளதா?? என்று சிலர் வினவி வருகின்றனர். இந்நிலையில் அடுத்தகட்டமாக தற்போது புதுவை தலைமை செயலாளர் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கொரோனா தலையெடுக்க காரணம் பள்ளி திறப்பா?? பிரச்சாரமா?? – ஆலோசனையில் தலைமை செயலாளர்!!

தற்போது தலைமை செயலாளராக அஷ்வாணி குமார் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் விரைவில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இவருக்கு பதில் ஜெயத்ரவி புதுவை தலைமை செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவர் குஜராத் மாநிலத்தின் சுகாதாரத்துறை முதன்மை செயலராக திகழ்கிறார். மேலும் இவர் சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்தில் அணுக்கரு இயற்பியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here