அதிகமுகவை எந்த தொகுதியிலும் ஜெயிக்க விட மாட்டேன்’ – என்ன ஒரு வில்லத்தனம் கருணாஸ் உங்களுக்கு??

0

தமிழக சட்டமன்ற தேர்தலில் முக்குலதோர் புலிப்படை தலைவர் கருணாஸ் போட்டியிடவில்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேலும் தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்கும் பணியிலும் அவர் இறங்கியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து வேட்பு மனுவை தாக்கல் செய்யும் பணியும் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் இந்த முறை ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார். பின்பு இந்த தேர்தலில் தனது ஆதரவு திமுக கட்சிக்கு என்று அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார் கருணாஸ். பின்பு அவர் அதில் இருந்து பின்வாங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த தேர்தலில் திமுகவிற்கு அளிக்கும் எனது ஆதரவை நான் வாபஸ் வாங்குகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

என்ன தான்டா நடக்குது அங்க?? புதுவையில் தலைமை செயலாளர் பதவி நீக்கம்!!!

இன்னும் தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் மேலும் ஓர் தகவலை அவர் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி பங்கேற்காது என்று தெரிவித்தார். மேலும் இந்த தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் தோல்வியை தழுவ வேண்டும் என்றும் அதற்கான பணிகளில் முக்குலத்தோர் புலிப்படையினர் ஈடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here