அப்பா பற்றி கேட்கும் சௌந்தர்யா, அம்மா பற்றி கேட்கும் ஹேமா – தடுமாற்றத்துடன் பாரதி மற்றும் கண்ணம்மா!!

0

“பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று சௌந்தர்யலட்சுமி தனக்கு தந்தை இல்லாததால் மிகவும் தாழ்வாக உணருகிறார். கண்ணம்மாவுடன் மருத்துவமனைக்கு சென்ற தனது மனைவியை ஹவுஸ்ஓனர் மிகவும் கேவலமாக பேசுகிறார்.

அஞ்சலியை கவனிக்கும் குடும்பத்தினர்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று சௌந்தர்யலட்சுமி கண்ணம்மா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததால் மிகவும் கோபத்தில் இருக்கிறார். அவரை சமாதானப்படுத்த கண்ணம்மா எவ்வளவோ முயற்சித்து பார்த்தும் கண்ணம்மாவால் முடியவில்லை. பின், சௌந்தர்யலட்சுமி தனக்கு தந்தை இல்லை என்பது மிகவும் கவலை அளிக்கும் ஒன்றாக இருப்பதாக தெரிவிக்கிறார். தந்தையை பற்றி கேட்டால் கண்ணம்மா அமைதியாகி விடுவதால் தான் தற்போது அதனை அதிகமாக கேட்பதில் என்றும் தெரிவிக்கிறார்.

அறிமுகமாகிறது ரியல்மி X7 மற்றும் X7 ப்ரோ – விலை & சிறப்பம்சங்கள்!!

இதனை கேட்கும் கண்ணம்மா தனது மகளின் ஏக்கத்தினை புரிந்து கொண்டு கவலை கொள்கிறார். இதனை அடுத்து பாரதி வீட்டில் அஞ்சலி கர்ப்பமாக இருப்பதால் அனைவரும் அவருக்கு சில அறிவுரைகளை வழங்குகின்றனர். அஞ்சலி மருந்தினை சாப்பிட மறுக்கிறார். காரணம், அந்த மருந்து மிகவும் கசப்பாக இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். அவரை சமாதானப்படுத்தி குடும்பத்தினர் அனைவரும் மருந்தினை சாப்பிட வைக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க அனைவரும் ஹேமாவிடம் உனக்கு தங்கச்சி வேண்டுமா அல்லது தம்பி வேண்டுமா என்று கேட்கின்றனர். ஹேமா எனக்கு அம்மா தான் வேண்டும் என்று கூறிவிடுகிறார். இதனால் அனைவரும் சில நொடிகள் வாய் அடைந்து போய் விடுகின்றனர். ஹேமாவை எப்படி சமாதானப்படுத்துவது எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை.

சௌந்தர்யா உனக்கு ஏற்ற வயது வரும் போது நான் உனது அம்மா குறித்து கூறுவேன் என்று அப்போதைக்கு சமாளித்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here