லட்சுமி கண்ணம்மாவோட குழந்தைனா அப்போ ஹேமா யாரு?? குழப்பத்தின் உச்சத்தில் வெண்பா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல எதிர்பாராத திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் வெண்பா கார் ஓட்டிக்கொண்டு வர எதிரில் லக்ஷ்மியை எடுத்து விடுகிறார். மேலும் வீட்டில் இறங்கிவிடும் வெண்பா அது கண்ணம்மாவின் குழந்தை என்பதையும் கண்டுபிடிக்கிறார்.

பாரதி கண்ணம்மா 

பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தைய எபிசோடில் கண்ணம்மா பாரதி வேடமணிந்து தனக்கு நடந்த கொடுமையையும், சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமையையும் வீர தீரமாக பேசி பாரதி கையாலேயே பரிசையும் பெற்றுக்கொண்டார்.

இது கண்ணம்மாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் தனது பழைய நினைவுகளை நினைத்து பார்க்கிறார். பாரதியுடன் தான் சந்தோசமாக இருந்த நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்து பார்க்கிறார் கண்ணம்மா. எப்படி சந்தோசமாக வாழ்ந்த வாழ்கை இப்படி பாழாக போய்விட்டதே என்றும் புலம்புகிறார்.

மேலும் வெண்பாவை காட்ட காரில் புலம்பிக்கொண்டு வருகிறார் வெண்பா. இத்தனை நாள் ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்பது தெரியாமல் இருந்திருப்பதை நினைத்து ஆத்திரமடைகிறார். காரை வேகமாக ஒட்டி செல்ல வழியில் நடந்து செல்லும் லட்சுமி மீது இடித்து விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கிருப்பவர்கள் பதறியடித்து கொண்டு அங்கு வர வெண்பா லட்சுமியை கண்டபடி திட்டுகிறார். மேலும் அங்கிருப்பவர்கள் வெண்பாவை திட்ட ஆரம்பிக்க நீங்க பணம் பறிக்கும் கும்பல் தானே என்று போலீசை அழைப்பதாக மிரட்டுகிறார். லட்சுமி கல்லை எடுத்து காரை உடைக்க செல்கிறார்.

தனது கணவருடன் ஜோடியாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ஃபரினா – இணையத்தில் வைரல்!!

இதனால் அதிர்ச்சியடையும் வெண்பா லட்சுமியை தடுத்து நிறுத்த அங்கிருப்பவர்கள் லக்ஷ்மியை வீட்டில் ட்ராப் செய்ய வேண்டும் என்று மிரட்டுகின்றனர். வேறு வழியில்லாமல் காரில் லக்ஷ்மியை அழைத்து செல்கிறார். காரில் உட்கார்ந்து கொண்டு பல அலப்பறைகளை செய்யும் லட்சுமியை பார்த்து எரிச்சலடைகிறார் வெண்பா.

வீட்டின் முன்பு இறங்கி விட காரை எடுத்து செல்லும் வெண்பா திடீரென கண்ணாடியில் பார்க்க கண்ணம்மாவும் லட்சுமியும் கொஞ்சிக்கொண்டுள்ளனர். இதனை பார்த்த வெண்பாவிற்கு மயக்கமே வந்துவிடும் போல ஆகிவிட்டது. லட்சுமி தான் கண்ணம்மாவின் குழந்தை என்றால் அப்போ ஹேமா யார் என்றும் யோசிக்கிறார்.

டிஎன்ஏ டெஸ்டில் ஹேமா குழந்தை என்று நிரூபணம் ஆகிவிட்டது. அப்படி என்றால் யார் என்று வெண்பாவிற்கு குழப்பம் ஏற்படுகிறது. மேலும் லட்சுமி வெண்பாவை பற்றி கண்ணம்மாவிடம் ஆரம்பிக்கிறார். திடீரென பாரதியின் மனைவி வெண்பா என்று சொல்ல கண்ணம்மாவிற்கு கோவம் வருகிறது. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here