தன் குழந்தை என்றே தெரியாமல் ஹேமாவை பார்த்து ஏங்கும் கண்ணம்மா – சூடுபிடிக்கும் பாரதிகண்ணம்மா கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா தனது குழந்தையை எப்படியாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று போராடி வருகிறார். இந்நிலையில் ஒரு புதிய தொழிலை தொடங்க திட்டமிடுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதியிடம் அம்மாவை ட்ரீட்மென்ட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று லட்சுமி தனியாக தேடி சென்றார். அப்பொழுது துர்கா அங்கு இருக்க ஹாஸ்பிடலுக்கு செல்ல உதவி செய்கிறார். துர்காவுக்கும் லட்சுமிக்கும் இடையே நல்ல உறவும் வளர்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்படியும் சில எபிசோடுகளில் துர்காவிற்கு கண்ணம்மாவும் பாரதியும் இன்னும் சேரவில்லை என்ற உண்மை தெரிந்து விடும். இந்நிலையில் ஹேமாவின் செயல்கள் அனைத்தும் கண்ணம்மாவை உரித்து வைத்திருக்கிறது. இதனால் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் இருந்து குழந்தையை பிரித்ததற்காக வருத்தப்படுகிறார்.

6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மேலும் லட்சுமி பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணை அழைத்து வந்து முக்கியமான விஷயம் என்று கண்ணம்மாவை அழைத்து செல்கிறார். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் காலி செய்து செல்ல அவர்கள் இத்தனை நாள் பார்த்த சமையல் வேலையை கண்ணம்மாவிடம் ஒப்படைகின்றனர்.

இதனால் கண்ணம்மாவும் சந்தோஷமடைகிறார். இதற்கு லட்சுமி தான் காரணம் அனைவரும் புகழுகின்றனர். துளசியும் வீட்டிற்கு வர நடந்தவற்றை சொல்லுகின்றனர். துளசியும் சந்தோஷமடைய அப்பொழுது திடீரென வரும் ஹவுஸ் ஓனர் வீட்டை காலி செய்ய சொல்கிறார்.

என்ன செய்வது என்றும் யோசித்துக்கொண்டுள்ளனர். அடுத்ததாக கண்ணம்மாவை அந்த ஆட்டோகாரர் ஸ்கூலுக்கு வந்து அறிமுகப்படுத்துகிறார். இந்த ஸ்கூலில் லட்சுமியை படிக்க வைக்க முடியவில்லையே என கவலைப்படுகிறார். அனைவருக்கும் சாப்பாடை எடுத்து கொடுக்க ஹேமா தனியாக அமர்ந்திருப்பதை பார்க்கிறார் கண்ணம்மா. ஹேமாவின் அருகில் செல்ல அதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here