பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி லட்சுமியிடம் முதன்முறையாக அப்பாவை பற்றி கேட்கிறார். லட்சுமி சொன்ன பதிலை வைத்து கண்ணம்மா மீது காண்டாகிறார் பாரதி.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி தற்போது பாரதி வீட்டில் இருக்க கண்ணம்மாவின் அப்பா சண்முகம் அவரை பார்க்க வருகிறார். லட்சுமியிடம் தன்னை தாத்தா என்று அறிமுகப்படுத்தி கொள்கிறார். லட்சுமி வழக்கம் போல கேள்வி மேல் கேள்வி கேட்க அதற்கு சௌந்தர்யா எப்படியோ சமாளித்து விடுகிறார்.
அதன் பிறகு லட்சுமி தாத்தா என்று சண்முகத்தை அழைக்க அவர் முகத்தில் ஏகப்பட்ட ஆனந்தம். தன் பேத்தியை பார்த்து விட்டோம் என்று பூரிப்பில் இருக்கிறார். அதன் பிறகு தன் மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்ற கவலையில் உள்ளார்.
அடுத்ததாக லட்சுமி தன் அம்மாவை பிரிந்து இருக்க முடியாமல் தவிக்கிறார். உன் பக்கத்துல தூங்குனா தான் எனக்கு தூக்கமே வரும். இங்க வசதி இருந்தும் என்னால உன்ன விட்டுட்டு இருக்க முடியல. நான் சொன்ன ஒரு பொய் இவ்வளோ தூரம் வரைக்கும் வந்து விட்ருச்சு என்று யோசிக்கிறார்.
அப்பொழுது பாரதி லட்சுமி தனியாக இருப்பதை பார்த்து வருகிறார். தான் மிகவும் கவலையில் இருந்ததாகவும், அதனால் தான் அப்படி பேசியதாகவும் சொல்லி மன்னிப்பு கேட்கிறார். அதன் பிறகு லட்சுமி ஹேமாவின் அம்மாவை பற்றி விசாரிக்கிறார். அவளை அவங்க அம்மா தேடவே மாட்டாங்களா?? என்றும் சொல்கிறார்.
அதற்கு பாரதி ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். அடுத்ததாக பாரதி பெத்த பிள்ளையை விட்டுட்டு இவளால் எப்படி இருக்க முடியுது, ஹேமாவை என்னால ஒரு நிமிஷம் கூட பிரிஞ்சு இருக்க முடியல, இவளுக்கு பொய்யா இருந்தே பழக்கம் ஆகிடுச்சு போல என்று ஆத்திரமடைகிறார்.
அதன் பின் லட்சுமியிடம் உங்க அப்பா எங்கே என்று கேட்கிறார். அதற்கு லட்சுமி தான் இத்தனை நாட்களில் அப்பாவை பார்த்ததே இல்லை என்றும் சொல்கிறார். இதனை கேட்ட பாரதி கோவமடைகிறார். இவளுக்கு அப்பா யாருனு தெரியாம இருக்க என்கிட்ட தள்ளிவிட பாக்குறாளா?? அதனால தான் இவ இத்தனை நாள் அவளை விட்டுட்டு இருக்கா போல?? என்று கேவலமாக யோசிக்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்