தமிழகத்தில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது பாரதி கண்ணம்மாவும் ராஜா ராணி சீரியலும் திங்கள் கிழமையில் இருந்து நிறுத்தப்படவுள்ளன. இதனை கேட்ட ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
சீரியல்கள் நிறுத்தம்
விஜய் டிவி என்றாலே சீரியலுக்கு அதிக புகழ் பெற்றது தான். நாம் இருவர் நமக்கிருவர்’ சீரியலில் ஆரம்பித்து மௌன ராகம் வரை அனைத்துமே மக்களை கொள்ளைகொண்ட சீரியல் தான். அனைத்து சீரியல்களும் மக்களை வெகுவாக கொள்ளைகொண்டது.
இப்போதெல்லாம் வெள்ளித்திரையை விட சின்னத்திரை நடிகைகள் தான் மக்கள் மனதில் அதிக இடத்தை பிடித்துள்ளன. ஏனெனில் வெள்ளித்திரை போல சின்னத்திரையிலும் காதல், அடிதடி என அனைத்தும் காட்டப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தில் தான் மக்கள் சீரியலை தொடர்ந்து பார்க்கின்றனர். இப்படி இருக்க தற்போது லாக்டவுன் வேறு போடப்பட்டுள்ளதால் மக்களுக்கு பொழுதுபோக்கே இந்த சீரியல்கள் தான்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் தற்போது போடப்பட்ட ஊரடங்கால் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இந்நிலையில் சீரியல்கள் பலவும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரதி கண்ணம்மாவும், ராஜா ராணி சீரியலும் வரும் திங்கள் முதல் புதிய எபிசோடுகள் நிறுத்தப்பட்டு பழைய எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது.