பாக்கியலட்சுமி சீரியல் – எழிலிடம் தன் கடந்த காலத்தை சொல்லி முடிக்கும் அமிர்தா! நட்பு தொடருமா?? அல்லது காதலாக மலருமா??

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அமிர்தா தனக்கு நடந்த கொடுமைகளை எழிலிடம் கூறுகிறார். மேலும் அமிர்தாவின் முன்னாள் கணவர் பற்றி சொல்லி முடிக்க இவர்களின் நட்பு தொடருமா?? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவின் மாமா எழிலிடம் வந்து அமிர்தாவிற்கு திருமணம் நடந்து விட்டதாக சொல்லி எழில் அமிர்தா மீது கோவப்படுகிறார். அமிர்தா தனக்கு பிடிக்காமல் இந்த திருமணம் நடந்ததாகவும், தன் கணவர் கணேஷ் தான் தன்னை படிக்க வைக்க ஆசைப்பட்டதாகவும் சொல்கிறார்.

சாகும் தருவாயிலும் தன்னை படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோரிடம் சத்தியம் வாங்கியதால் தான் படிப்பதாகவும் சொல்கிறார். இதனை கேட்ட எழில் கண்கலங்கி விட்டார்.

உங்களை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்றும் சொல்கிறார். இப்படி ஒரு கஷ்டத்தை மனசுல வச்சுக்கிட்டு எப்படி சிரிச்சுக்கிட்டு இருந்திங்க என்று சொல்கிறார். மேலும் கொஞ்ச நாலு உங்க கூட பழகுனாலும் ரொம்ப சந்தோசமாக இருந்துச்சுங்க என்று சொல்கிறார் அமிர்தா.

இதனால் ஷாக்காக்கும் எழில் இனிமேல் என்கூட பேச மாட்டிங்களா?? என்று கேட்கிறார். தன்னால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனாலும் எழில் அமிர்தாவை விடவில்லை. நம்ம நட்பு இப்படியே தொடரும் என்று சொல்கிறார். இது அமிர்தாவிற்கு பெரிய ஆறுதலாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here