பாக்கியலட்சுமி சீரியல் இப்பொழுது இனியா வீட்டை விட்டு சென்றதில் இருந்தே வீடே வெறிச்சோடி போனது போல் ஆகி விட்டது. அதுமட்டுமில்லாமல் பாக்கியா இனியாவை நினைத்து துடித்து கொண்டுள்ளார். ஆனால் அந்த கல்நெஞ்சக்கார கோபி இனியாவை பார்க்கவே அனுமதிக்க மறுக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது ஒரு பக்கம் போக இன்னொரு பக்கம் இனியா மற்றும் ராதிகா இடையே பிரச்சனைகள் நடந்து கொண்டே உள்ளது. கோபிக்கு வீட்டில் அடிக்கடி கோவப்பட்டு கத்துவது பழக்கமான ஒன்று. ஆனால் ராதிகாவிடம் பொட்டி பாம்பு போல அடங்கி போகும் சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து போயுள்ளார் கோபி.
சில பேர் ரொம்ப நம்புறாங்க ., அவங்கிட்ட இத சொல்ல போறேன் – ஆரம்பத்திலேயே ட்விஸ்ட் வைத்த ஆண்டவர்!!
இப்படி இருக்க பாக்கியா இனியாவை காட்டாத கோவத்தில் கொந்தளித்து கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் ராதிகா மற்றும் கோபி இடையே இப்பொழுது பிரச்சனை வந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் கோவமடையும் கோபி ராதிகாவை அடிக்க கை ஓங்குகிறார். இது தான் இனி வரும் எபிசோடுகளில் நடக்க இருக்கிறது. அப்படி என்றால் இனி வரும் காட்சிகள் அனல்பறக்க உள்ளது.