பிரபல பாடகர் தெருக்குரல் அறிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது அந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.
தெருக்குரல் அறிவு:
கோலிவுட்டில் பலவிதமான ராப் பாடல்களை பாடி மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் தான் தெருக்குரல் அறிவு. இவர் ரஜினி நடித்த காலா படத்தில் இடம்பெற்ற உரிமையை மீட்போம் என்ற பாடலின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு சந்தோஷ் நாராயணன் இசையில் அவருடைய மகள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு சேர்ந்து பாடிய எஞ்சாமி பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த பாடலின் மூலம் தெருக்குரல் அறிவு உலகமெங்கும் ரிச் ஆனார். ஆனால் சர்வதேச இதழான ரோலிங் ஸ்டோனில் தி புகைப்படம் மட்டுமே இடம் பெற்று வெளியானது. இதனால் ஆதங்கம் பட்ட தெருக்குரல் அறிவு ஒரே நாளில் அடுத்தவரின் உழைப்பை திருடி விட முடியாது என்று பதிவிட்டார். மேலும் இந்த சர்ச்சையில் பா ரஞ்சித் அறிவுக்கு சப்போர்ட் செய்ததால் சந்தோஷ் நாராயணனுக்கும் பா ரஞ்சித் -கும் இருந்த உறவு அறுந்தது.
இப்படி இருக்க அடுத்த படங்களில் கமிட்டாகி தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார். இந்த நிலையில் தனது ஆசை காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதாவது பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் தலைவர்களின் வழி நடக்கும் கல்பனா என்பவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கூடிய விரைவில் திருமணம் நடைபெறலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது .