பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் பல சூழ்ச்சிகளையும் தாண்டி பாக்கியா வெற்றிகரமாக அமைச்சரை வைத்து தனது ஹோட்டல் திறப்பு விழாவை நடத்தி முடிக்கிறார். இதனால் கோபி தான் நினைத்தது நடக்கவில்லை என ஆத்திரத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் கோபி திறப்பு விழாவிற்கு சென்ற விஷயம் தெரிந்து ராதிகா அவரை அடிக்கிறார். இதை இனியா ஈஸ்வரியிடம் சொல்லிவிட அவர் ராதிகாவை சத்தம் போடுகிறார்.
ஆனால் ராதிகாவோ ஈஸ்வரி சொல்லும் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் திமிராக பதில் சொல்கிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ராதிகாவின் செயலால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி அவரை எவ்வளவோ தன் மகனிடம் சண்டை போடக்கூடாது என எச்சரிப்பாராம். ஆனால் ராதிகா அதைக் கேட்க நீங்க யார் என எதிர்த்துப் பேசுவாராம். இதனால் ஈஸ்வரி கோபத்தில் ராதிகாவை வீட்டை விட்டு அனுப்பி விடுவாராம்.