மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் மத்திய அரசு பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது மத்திய அரசு நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் தற்போது இச்சட்டத்தை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் அதற்கு மாறாக இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.