பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி செய்த துரோகத்தால் குடும்பமே சிதைந்து போய்விட்டது. பாக்கியாவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று எழில், ராமமூர்த்தி, ஈஸ்வரி புலம்பி கொண்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளனர்.
அதே சமயத்தில் கோபி-ராதிகா வேறு அங்கு தான் ஹனிமூன் வந்துள்ளனர். இதனால் பல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. ராதிகா இதனால் பாக்கியாவை பரம எதிரியாக பார்க்கிறார். மேலும் குடும்பம் மொத்தமும் பாக்கியாவிற்கு பக்கபலமாக உள்ளனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் அசம்பாவிதம் ஒன்று நடக்க இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, பாக்கியாவை பலரும் கேவலமாக நினைக்க ஆரம்பிக்க காதுப்படவே பேச ஆரம்பித்து விட்டனர். இதனால் குடும்பம் மொத்தமும் உடைத்து போகிறது. இந்நிலையில் துக்கம் தாங்க முடியாமல் ஏற்கனவே உடல்நலம் சரியில்லாமல் இருந்த ராமமூர்த்தி இறந்து விடுவார். இதனால் குடும்பம் மேலும் நிலைகுலைந்து போகிறது. இதற்கு மேல் பாக்கியா எப்படி மீண்டு வருவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.