பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது திருமண வைபோகம் காரசாரமாக சென்று கொண்டுள்ளது. ஒரு பக்கம் கணவரின் திருமணத்திற்கே சமையல் செய்யும் கொடுமை பாக்யாவுக்கு நடந்துள்ளது. இன்னொரு பக்கம் மகனின் திருமணத்தை நிறுத்த ஈஸ்வரி, ராமமூர்த்தி போராடி கொண்டுள்ளனர். பாக்கியா தனக்கு காசு கண்டிப்பாக வேண்டும் விடாப்பிடியாக வேலை பார்த்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது ஒருபுறம் ராதிகா அவமானத்தால் கூனி குறுகிய போயுள்ளார். இன்னொரு பக்கம் இனியாவிற்கு கடைசி நேரத்தில் அப்பாவின் திருமணம் குறித்து தெரிய வருகிறது. இந்நிலையில் ராதிகா மற்றும் பாக்கியா இடையே பெரிய வாக்குவாதமே நடந்திருக்கிறது. அதாவது ராதிகா பாக்கியாவை பார்த்து நீங்க ரொம்ப அப்பாவினு நெனச்சேன், ஆனா கல்யாணத்தை நிறுத்த தானே இங்க வந்து இருக்கீங்க என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா அடுத்தவங்க குடும்பத்தை பிரிக்கிற புத்தி எனக்கு கிடையாது என்று சொல்லி விடுகிறார். இதனால் ராதிகாவிற்கு அவமானமாக போய்விடுகிறது.
என்ன இப்படி ஆகிட்டீங்க மாளவிகா., ஆள் அடையாளமே தெரியலையே., வீங்கிய முகத்துடன் வெளியான போட்டோ!!
மேலும் கோபி ராதிகாவின் கழுத்தில் தாலியும் கட்டி விடுவார். இனியாவும், ஈஸ்வரியும் மண்டபத்திற்கு கல்யாணத்தை நிறுத்த வரும் சமயத்தில் திருமணம் இனிதே நடந்து முடிகிறது. ஈஸ்வரி வண்டை வண்டையாக ராதிகாவை இழிவாக பேசி வெந்த புண்ணில் மேலும் ஈட்டியை பாய்ச்சுகிறார். இதனால் ராதிகாவின் வெறி மேலும் அதிகமாகி விடும். இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான் என்று தவறாக புரிந்துகொண்ட முழு வில்லியாக உருவெடுக்கிறார் ராதிகா.