ஸ்கூலில் மீண்டும் இனியாவிடம் பேச முயற்சிக்கும் சந்தோஷ் – இனியா எடுக்க போகும் முடிவு என்ன??

0

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா எல்லா பிரச்சனைகளும் முடிந்து இன்றைக்கு முதன்முதலாக ஸ்கூலுக்கு செல்கிறார். மேலும் சந்தோஷ் இனியாவிடம் பேச முயற்சிக்கிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் முதமுதலாக பாக்கியா நடந்ததை நினைத்தே வருத்தப்பட்டுக்கொண்டுள்ளார். அடுத்ததாக இன்றைய எபிசோடில் இனியா ஸ்கூலுக்கு செல்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் இனியாவுக்கு புத்திமதி சொல்கின்றனர். இனிமேல் இந்த மாதிரியான தவறை செய்ய கூடாது என்று கூறுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இனியாவின் பாட்டியும் இனிமேல் இந்த மாதிரி தவறு செய்ய தூண்டினால் உன் அம்மா தான் நியாபத்திற்கு வரணும் என்று சொல்கிறார். நான் உன் அம்மாவாக இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த அளவிற்கு பண்ணி இருக்க மாட்டேன் என்று சொல்கிறார்.

இனியாவிற்கு தன் அம்மாவை பற்றி இப்பொழுது தான் புரிகிறது. அடுத்ததாக எழில் இனியாவை ஸ்கூலில் சென்று விடுகிறார். எதுக்கும் கவலை படாதே என்று சொல்ல தான் அம்மாவை நினைத்து கவலை படுவதாக சொல்கிறார். ஸ்கூலில் இனியாவின் தோழிகள் வந்து பேசுகின்றனர்.

நீ வர மாட்டியோனு ரொம்ப பயந்து போயிட்டோம் என்று கூறுகின்றனர். எங்க அம்மா தான் பேசி மறுபடியும் சேர்த்து விட்டாங்க என்று சொல்லி அழுகிறார். அப்பொழுது சந்தோஷ் அங்கு வருகிறார். சந்தோஷை மட்டும் மறுபடியும் ஸ்கூலில் சேர்த்துக்கிட்டாங்க.

ஏனென்றால் அவன் பணக்கார பையன் என்று சொல்கின்றனர். இனியாவை பார்த்ததும் சந்தோஷ் வந்து பேசுகிறார். ஆனால் இனியா அவரை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. இவரால் தான் எனக்கு எவ்வளவு பிரச்சனையே. நானா இப்படி எல்லாம் பண்ணேனு நெனைக்க தோணுது என்று கூறி வருத்தப்படுகிறார்.

நீங்க வேற லெவல் ஹிட்மேன் அசத்திடீங்க போங்க – ரோஹித் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

சந்தோஷ் கூப்பிட கூப்பிட திரும்பி பார்க்காமல் செல்கிறார். அடுத்து எழில் அமிர்தா பேசிகொண்டுள்ளனர். அடுத்த படம் எப்போ எடுக்க போறீங்க என்று கேட்க நீங்க நடிக்க வந்தால் அடுத்த படம் ரெடி என்று சொல்ல அமிர்தா முறைக்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here