ஐஸ்வர்யாவின் கல்யாண பத்திரிக்கையை எரிக்கும் சேது – நடக்கப்போகும் விபரீதம்?? பல ட்விஸ்டுகளுடன் ‘இதயத்தை திருடாதே’!!

0

“இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சிவா மற்றும் சஹானா இருவரும் தாட்சயினிக்கு பத்திரிகை வைத்து விட்டு வருகின்றனர். பின், ஐஸ்வர்யா தனது திருமணம் நடக்க இருப்பதால் சிவாவிற்கு ஒரு பரிசினை கொடுக்கிறார்.

“இதயத்தை திருடாதே” சீரியல்

இன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் சிவா மற்றும் சஹானா இருவரும் தாட்சயினிக்கு திருமண பத்திரிகையினை வைத்து விட்டு வருகிறார். இதனால் தாட்சயினி மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். அதே போல் சேதுவும் கல்யாண பத்திரிகையினை எரித்து விடுகிறார். பின், ஐஸ்வர்யா சிவாவிற்கு ஒரு மோதிரத்தினை தருகிறார். அந்த மோதிரம் ஐஸ்வர்யாவின் தலைமுடி கொண்டு செய்தது என்றும் தெரிவிக்கிறார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதனால் சிவாவிற்கு கண்கலங்கி விடுகிறது. பின், சிவா மற்றும் சஹானா இருவரும் தனிமையில் பேசும் போது சஹானா தனது இதயத்தில் இருப்பதாக கூறுகிறார். அப்போது சஹானா சரி நெஞ்சை கிழித்து பார்த்து விடுவோம் என்று கூறி கத்தியை எடுக்கிறார். இதனால் சிவா பயந்து ஓடி விடுகிறார். பின், தனது நண்பர்களுடன் வெளியே செல்லும் ஐஸ்வர்யா அவர்களிடம் சந்தோசமாக பேசுகிறார். அப்போது சேது வந்து ஐஸ்வர்யாவை மிரட்டி விட்டு போகிறார்.

ஐஸ்வர்யா தனது திருமணத்திற்கு முன்பு தனக்கு மருதாணி வேண்டும் என்று கூறுகிறார். சரி என்று கூறும் சிவா அவருக்கு மருதாணி வாங்கி வந்து கொடுத்து அதனை வைத்தும் விடுகிறார். அப்போது தனக்கும் வேண்டும் என்று சஹானா கேட்கிறார். முடியாது என்று கூறிவிடும் சிவா சஹானா உறங்கியதும் அவருக்கு வைத்து விடுகிறார். காலையில் சஹானாவிற்கு மருதாணி நன்றாக சிவந்து விடுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து சிவா சஹானாவிடம் மிகவும் காதலோடு பேசுகிறார். ஒரு கட்டத்தில் சஹானா மிகவும் உணர்ச்சிவசம் அடைந்து விடுகிறார். இருவருக்குமான காதல் மேலும் மேலும் அதிகரிக்கிறது. இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here