நீங்க வேற லெவல் ஹிட்மேன் அசத்திடீங்க போங்க – ரோஹித் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

0
rohit
rohit

இந்தியாவில் தற்போது 14வது ஐபிஎல் தொடர் மிக சிறப்பாக நடந்து கொண்டு வருகிறது. இந்த தொடரில் மும்பை அணி விளையாடிய 2 போட்டிகளில் கேப்டன் ரோஹித் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

ரோஹித் சர்மா:

நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்த ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்த அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அதிரடி, நட்சத்திர வீரர்களே. மற்ற அணிகள் உடன் விளையாடும் பொழுது 1 விக்கெட்டை கைப்பற்றி விட்டால் எதிரணியினர் சந்தோஷப்படுவர். ஆனால் மும்பை அணியுடன் விளையாடும் பொழுது 1 விக்கெட்டை கைப்பற்றி விட்டால் எதிரணியினர் சோகமடைவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

rohit
rohit

காரணம், அந்த அணியில் ஒரு வீரர் போனால் மற்றொரு அதிரடி வீரர் வருவார். அந்த அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பேட்டிங், பௌலிங் என அனைத்திலும் மிக சிறந்து விளங்குகிறார்கள். இந்த தொடரில் இந்த அணி இதுவரை 2 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் 1 வெற்றி 1 தோல்வியை மும்பை அணி சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த இரு போட்டிகளில் மும்பை அணி கேப்டன் ரோஹித் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

ஐபிஎல்- லில் சொதப்பிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் ஷாருக் கான்!!

அதுஎன்னவென்றால் முதல் போட்டியில் காண்டாமிருகத்தை காக்க வேண்டும் என்பதை தெரிவிக்கும் வகையில் ஷூ அணிந்திருந்தார். நாட்டில் அதிகமான அளவில் காண்டாமிருகங்கள் அழிந்து வருவதால் அதனை பாதுகாக்க ரசிகர்களை அறிவுறுத்தும் வகையில் அது இருந்தது.

rohit
rohit

அதேபோல் தனது இரண்டாவது போட்டியில் கடலில் வாழும் உயிரினங்கள் மற்றும் ஆமை போன்ற இனங்களை காக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் அவர் நீல நிறத்தில் ஆமை பட பொருந்திய ‘சூ’வை அணிந்துள்ளார். இது அவரது ரசிகர்கள் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. இதற்கு பலர் ரோஹித்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here