அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடர் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை:
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று பிசிசிஐ முன்பு அறிவித்திருந்தது என்பது அனைவரும் அறிந்த ஓன்று தான். இதற்கு பதில் அளிக்கும் விதத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, ஆசிய கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், பாகிஸ்தான் அணி 50 ஓவர் உலக கோப்பைக்காக இந்தியா வாராது என்று முன்பு தெரிவித்திருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதே போல, பிசிசிஐயானது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவான இடத்தில் தான் அடுத்த வருடத்திற்கான ஆசிய கோப்பை நடைபெறும் என்ற கோரிக்கையும் முன்பு வைத்திருந்தது. இந்நிலையில், இதற்கும் ரமீஸ் ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு பெண்ணை மணந்த வீராங்கனை?? வெளியான திருமணப் புகைப்படம்!!
அதாவது, 2023 ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை பாகிஸ்தானை தவிர்த்து மற்ற இடங்களில் மாற்றப்பட்டால், இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகி கொள்ளும் என ரமீஸ் ராஜா கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது இந்த கருத்து, கிரிக்கெட் வட்டாரங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.