தமிழகத்தில், இந்த அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற வாய்ப்பு மற்றும் அவர்களுக்கான ஓய்வூதிய உயர்வு போன்ற திட்டங்கள் ஜனவரி 1 முதல் அமலாகும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஸ்டாலின் அறிவிப்பு:
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார். சமீபத்தில் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கான திருமணத்தை நடத்தி வைத்த அவர், இவர்களை திருமணம் செய்ய முன் வருபவர்களுக்கு, அரசு பல நலத்திட்டங்களையும் செய்ய காத்திருக்கிறதாக அறிவித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் , இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய, முதல்வர் ஸ்டாலின் பல திட்டங்களை அறிவித்தார். அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் தொகை ரூபாய் 1000 லிருந்து 1500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவித்தார்.
இது மட்டும் அல்லாமல், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சென்று பணி புரிய முடியாத சூழல் இருந்தால், அவர்கள் வீட்டில் பணி செய்யலாம் என்ற திட்டத்தையும் அரசு உருவாக இருப்பதாக அறிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த அனைத்து நலத்திட்டங்களும் வருகிற ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் உறுதி அளித்துள்ளார்.