இந்தியாவில் பி டி உஷாவுக்கு பிறகு மிகவும் பிரபலமான தடகள வீராங்கனையாக வலம் வருகிறார் டூட்டி சந்த். இவர், இந்தியா சார்பாக கடந்த 2013ம் ஆண்டு முதல் ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகளில் 100 மற்றும் 200 மீட்டர் பிரிவில் வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை அள்ளி குவித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில், 100மீ, 200மீ மற்றும் 4X400 மீட்டர் தொடர் ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையும் தட்டி சென்றிருந்தார். இதனை தொடர்ந்து, 2016ம் ஆண்டில் பி டி உஷாக்கு பிறகு ஒலிம்பிக்கில் பங்கு பெற்று டூட்டி சந்த் இந்தியாவை பெருமைப்படுத்தினார். இதற்கிடையில், இவர் மீது பாலினம் சார்ந்த சில பிரச்சனைகளையும் இவர், எதிர்கொண்டு வந்தார்.
தென் ஆப்பிரிக்கா அணியில் இணையும் சூர்யகுமார்?? வெளிப்படையாக கூறிய முன்னாள் கேப்டன்!!
இந்நிலையில், தனது டிவீட்டர் பக்கத்தில், நேற்றும் உன்னை காதலித்தேன், இப்போதும் உன்னை காதலிக்கிறேன், எப்போதும் உன்னை காதலிப்பேன் என்று பதிவிட்டு, ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவரது, இந்த புகைப்படம், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு விட்டது போல் ரசிகர்கள் கிசுகிசுத்து வந்தனர். ஆனால் அந்த புகைப்படம் டூட்டி சந்த், தோழியின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
“Loved you yesterday, love you still, always have, always will.” pic.twitter.com/1q3HRlEAmG
— Dutee Chand (@DuteeChand) December 2, 2022