பல்கலைக்கழக மாணவர்கள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 19ம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செமஸ்டர் கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இருப்பினும் ஆகஸ்ட் – நவம்பர் மாதத்திற்கான செமஸ்டர் கட்டணத்தை ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. மேலும் இதில் தவறும் மாணவர்கள் அபாரதத்துடன் செப்டம்பர் 5ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்துமாறு கூறப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி கட்டணத்தை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாம் – உச்சநீதிமன்றம் அனுமதி!!
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவிற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் புது அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் நடப்பு செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 19ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.