தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனரான வெற்றிமாறன் இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாராம்.
திரையுலக இயக்குனர்:
தமிழ் திரையுலகில் மிகவும் அதிகமாக பேசப்பட்ட இயக்குனர் வெற்றிமாறன் காரணம் அவரது படங்கள் மற்ற இயக்குனர்களின் படங்களை விட வேறு ஒரு கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவில் பின்பற்றுபட்டு வந்த ஒரே விதமான திரைக்கதை அம்சத்தை மாற்றி அமைத்தவர், வெற்றிமாறன். இப்படி ஒரு இயக்குனர் விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் அதிகாரிகளால் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இவர் மற்றும் “ஆடுகளம்” படக்குழுவினர் “ஆடுகளம்” படத்தை கனடா நாட்டின் திரைப்பட விழாவில் படத்தை திரையிடுவதற்காக சென்றுள்ளனர். வெற்றிகரமாக திரைப்பட விழாவில் பங்கேற்றுவிட்டு டெல்லி விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளனர். அப்போது வெற்றிமாறனை ஒரு அதிகாரி ஏதோ விசாரித்துள்ளார்.
இந்தி தெரியாது:
அவர் இந்தியில் விசாரித்துள்ளதால் வெற்றிமாறன் தனக்கு இந்தி புரியவில்லை மற்றும் தனக்கு இந்தி பேச தெரியாது என்று கூறியுள்ளார். இதற்கு அந்த அதிகாரி “நம் நாட்டின் தேசிய மொழி இந்தி இது தெரியவில்லையா??” என்று கேட்டுள்ளார். இதற்கு வெற்றிமாறன் “என் தாய் மொழி தமிழ் எனக்கு அது தெரியும். மற்றவர்களிடம் பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்” என்று கூறியுள்ளார்.
அக்டோபரில் கொரோனா பாதிப்பு உச்சமடையும்!!
அதற்கு அந்த அதிகாரி “காஷ்மீர்காரர்களும் தமிழ்க்காரர்களும் நாட்டை பிரிக்கவே செய்கின்றனர்”என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தை அறிந்து அங்கு சென்ற “ஆடுகளம்” தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் வெற்றிமாறனை பற்றி அந்த அதிகாரியிடம் கூறியுள்ளனர். இந்த பிரச்சனையால் வெற்றிமாறன் விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்தாராம்.