அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு – பல்கலை நிர்வாகம் அறிவிப்பு..!

0
Anna univ
Anna univ

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் ஏற்கனவே பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எப்போது தேர்வு..?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதுவரை 738 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புகள்,

பள்ளி, கல்லூரிகளை மே 15 வரை திறக்க வேண்டாம் – மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை..!

  • ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த வழக்கமான செமஸ்டர் மற்றும் மறுதேர்வு (Arrear) உள்ளிட்ட அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
  • இந்த உத்தரவானது அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து உறுப்பு கல்லூரிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • ஊரடங்கு உத்தரவின் காலம் முடிவடைந்த பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here