இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரி வருகின்றன. இந்நிலையில் நாட்டில் முதல் மாநிலமாக ஒடிசாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்து உள்ளார்.
முதல்வரின் அறிவிப்புகள்:
பிரதமர் மோடி அவர்கள் அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14ம் தேதி உடன் முடிவடையும் நிலையில் ஒடிசா அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்,
- நாட்டில் முதல் முறையாக ஒடிசாவில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.
- பள்ளி மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஜூன் 17ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |