கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் சுதா சேஷய்யன் விளக்கம் அளித்துள்ளார்.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை..!
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்பது மலேரியா நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிற ஒரு மருந்தாகும். கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தினால் நல்ல குணம் இருப்பதை டாக்டர்கள் கண்டார்கள். ஆகவே இந்த மருந்தை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுள்ளது.
மாத்திரையை பயன்படுத்துவோர்கள்..!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தருகிற முன்னணியில் இருக்கும் டாக்டர், செவிலியர் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆய்வக முடிவு வந்தவர்களின் வீட்டில் அவர்களோடு உள்ளவர்கள் ஆகியோருக்கு நோய் அறிகுறிகள் இல்லையென்றாலும் இவர்களுக்கு நோய் தடுப்பாக இந்த மருந்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலில் ஒருநாள் காலை, மாலை இருவேளைகளும் 400 மி.கி. அளவும், பின்னர் வாரத்திற்கு ஒருநாள் 400 மி.கி. என்றளவில் 7 வாரங்களுக்கு உணவுக்கு பின்னர் இந்த மருந்தை உட்கொள்ளலாம். சிகிச்சையில் ஈடுபட்டவர்களுக்கு 7 வாரம் என்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு 3 வாரம் கொடுத்தால் போதுமானது.
டாக்டரின் பரிந்துரைப்படி உட்கொள்ளவேண்டும்..!
இந்த மருந்தை சாப்பிட்டால் நோயை தடுத்துவிடலாம் என்று எல்லோரும் கடையில் வாங்கி சாப்பிடவும் கூடாது. டாக்டரின் பரிந்துரைப்படி மட்டுமே உட்கொள்ளவேண்டும். 15 வயதுக்கு உட்பட்டவர்கள் விழித்திரை கோளாறு உள்ளவர்கள், ஒவ்வாமை உள்ளவர்கள், வேறு ஏதாவது பிரச்சினைகள் உள்ளவர்கள் தடுப்புக்காகக்கூட இந்த மருந்தை பயன்படுத்தவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |