இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விடுமுறையை மே 15 வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
ஊரடங்கை நீட்டிக்கலாம்:
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு முடிய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா , கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊரடங்கை நீட்டிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதால் மத்திய அரசு இது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் போக்குவரத்து தடை நீடிக்கும் என்றும் பள்ளிகள், கல்லூரிகளை மே 15 வரை திறக்க வேண்டாம் எனவும், மத நிகழ்ச்சிகளுக்கு தடை இன்னும் ஒரு மாதம் நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |