இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகளை திருடிய பணிப்பெண் ஈஸ்வரி அளித்துள்ள வாக்குமூலம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:
சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளும் தமிழ் சினிமாவில் இயக்குனருமாக விளங்கி கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் வீட்டில் இருந்து 60 பவுன் நகைகள் காணாமல் போன நிலையில், அதனை அவர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்த ஈஸ்வரி என்பவரும், டிரைவர் வெங்கடேசன் என்பவரையும் காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் அவர்களிடம் எல்லா நகைகளையும் பறிமுதல் செய்த நிலையில், விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரி அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் கூறியதாவது, ஐஸ்வர்யா அம்மா எனக்கு வெறும் 30 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் கொடுத்தார். அதை வைத்து இப்போது இருக்கும் காலகட்டத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும். அதனால் திருடினேன்.
டி 20 அரங்கில் எவரும் எட்டாத சாதனையை பதிவு செய்த பாகிஸ்தான் வீரர்…, சூர்யகுமாரையே மிஞ்சிட்டாரே!!
மேலும் எனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் இப்படி சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வந்தேன். இதனை ஐஸ்வர்யா அம்மா கண்டுக்காததால் பெரிய திருட்டில் இறக்கினேன் என்று ஈஸ்வரி கூறியுள்ளார். மேலும் ஐஸ்வர்யா அம்மா இன்னும் கண்டுக்காமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமாக திருடி இருப்பேன் என்று கூறியுள்ளார்.